2023ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழகத்தில் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்.பிளான்., எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) எழுத வேண்டும். டான்செட் (TANCET - Tamil Nadu Common Entrance Test) தேர்வெழுதி, தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. 


தொலைதூரக் கல்வித் திட்டத்தின் மூலம் B.E, B.Tech., Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாது.


இதற்கிடையே 2022ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு மே 14ஆம் தேதி நடைபெற்றது. முதுகலை தொழில்நுட்பப் படிப்புகளுக்கான டான்செட் தேர்வு மே 15 அன்று நடைபெற்றது. 


இந்த நிலையில் 2023ஆம் ஆண்டுக்கன டான்செட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.


எம்சிஏ படிப்புக்கான தேர்வு பிப்ரவரி 25ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். அதே நாளில் மதிய வேளையில் எம்.டெக்., எம்.இ., எம்.ஆர்க். மற்றும் எம்.பிளான். படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடைபெறும். குறிப்பாக மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை தேர்வு நடைபெறும். எம்பிஏ படிப்புக்கான தேர்வு பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.





இந்நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 






டான்செட் தேர்வு எழுத விரும்பும் தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். எனினும் தேர்வு ஆஃப்லைன் முறையில் நடைபெறும். 


கூடுதல் தகவல்களுக்கு:  https://tancet.annauniv.edu/tancet/ 


தொலைபேசி எண்கள்: 044-22358289 / 044-22358314 (10.00 AM to 6.00 PM)


இதையும் வாசிக்கலாம்: TN Best Govt Schools: இவைதான் தமிழ்நாட்டின் சிறந்த அரசுப்பள்ளிகள்: 114 பள்ளிகளின் பட்டியல்..! முழு விவரம்.. 


விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம்..விண்ணப்பிக்கும் முறை, தேர்வுசெய்யும் முறை இதுதான்