2024- 2025 ஆம்‌ கல்வியாண்டில்‌ பள்ளிகள்‌ ஜூன்‌ 6ம்‌ தேதி திறக்கப்பட உள்ள நிலையில்‌ பள்ளிகள்‌ திறக்கப்படுவதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள்‌ மற்றும்‌ இக்கல்வியாண்டில்‌ செயல்படுத்தப்பட வேண்டிய கல்விச்‌ செயல்பாடுகள்‌, கல்வி இணைச்‌ செயல்பாடுகள்‌, கல்வி சாராச்‌ செயல்பாடுகள் குறித்து பின்வரும்‌ அறிவுரைகளைப்‌ பின்பற்றி செயல்பட வேண்டும் என்று அனைத்துக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


பள்ளித்‌ தூய்மைப்‌ பணிகள்‌


* பள்ளியிலுள்ள அனைத்து வகுப்பறைகள்‌, தலைமை ஆசிரியர்‌ அறை, ஆய்வகம்‌, கழிப்பறைகள்‌ உள்ளிட்ட பிற அறைகள்‌ மற்றும்‌ வளாகம்‌ நன்கு தூய்மைப்படுத்தப்பட் டு இருப்பதை உறுதி செய்திடல்‌ வேண்டும்‌.


* வகுப்பறைகள்‌, தலைமை ஆசிரியர்‌ அறை மற்றும்‌ பிற அறைகளிலுள்ள தளவாடப்‌ பொருட்கள்‌, கதவு மற்றும்‌ ஜன்னல்கள்‌, கற்றல்‌ கற்பித்தல்‌ உபகரணங்கள்‌ ஆகியவை நன்கு தூய்மைப்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்தல்‌ வேண்டும்‌. காலாவதியான ஆய்வகப்‌ பொருட்களை முறைப்படி பதிவேட்டில்‌ பதிவு செய்து நீக்கம்‌ செய்திட வேண்டும்‌.


* பள்ளிக்‌ கட்டிடத்தின்‌ மேற்பரப்பில்‌ சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றி மழைநீர்‌ வடிந்து ஓடுவதற்கான பாதை சரியாக உள்ளதா என்பதையும்‌, மழைநீர்‌ சேகரிப்பு கட்டமைப்பு முறையாக சீர்‌ செய்யப்பட்டு பயன்பாட்டில்‌ இருப்பதையும்‌ உறுதி செய்திடல்‌ வேண்டும்‌.


 கிருமி நாசினி கொண்டு நன்கு சுத்தம்‌


* மாணவர்‌ பயன்பாட்டிற்கான குடிநீர்த்‌ தொட்டி மற்றும்‌ மேல்நிலை நீர்த்‌ தேக்கத்‌ தொட்டி அனைத்தையும்‌ உட்புறம்‌ கிருமி நாசினி கொண்டு நன்கு சுத்தம்‌ செய்து, தூய்மையாகவும்‌ பாதுகாப்பான குடிநீர்‌ மாணவர்களுக்கு கிடைக்கும்‌ வகையில்‌ உள்ளதை உறுதி செய்திட வேண்டும்‌.


* சமையலறை நன்கு சுத்தம்‌ செய்யப்பட்டும்‌ சமையல்‌ பாத்திரங்கள்‌ முறையாக கழுவப்பட்வ்டும்‌ பயன்படுத்துவதை உறுதி செய்திடல்‌ வேண்டும்‌.


*  பள்ளி வளாகத்திலோ அல்லது வகுப்பறைகளிலோ தேவையற்ற பயன்பாடற்ற பொருட்கள்‌ இருப்பின்‌அப்புறப்படுத்துதல்‌ அவசியம்‌. இவைகளை விதிகளின்படி எலம்‌ விட நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.


*  திறந்தவெளிக்‌ கிணறுகள்‌ இருப்பின்‌ அதன்‌ மேற்பரப்பினை யாரும்‌ அணுகா வண்ணம்‌ மூடிட நடவடிக்கை எடுப்பதுடன்‌ பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே இந்நடவடிக்கைகளை நிறைவு செய்யப்பட வேண்டும்‌.


*  கழிவுநீர்த்‌ தொட்டிகள்‌ மூடப்பட்டு பாதுகாப்புடன்‌ இருப்பதை உறுதி செய்யவேண்டும்‌.


*  பள்ளி வளாகம்‌ முழுவதும்‌ குப்பைகளின்றி தூய்மை செய்யப்படுவதை உறுதி செய்தல்‌ வேண்டும்‌


*  பள்ளியில்‌ மாணவர்கள்‌ பயன்படுத்தும்‌ அனைத்து இடங்களும்‌ கிருமிநாசினி கொண்டு சுத்தம்‌ செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தல்‌ வேண்டும்‌


*  பள்ளி வளாகத்தில்‌ உள்ள அனைத்துக்‌ குழந்தைகளும்‌ பாதுகாப்பாகப்‌ பயில தேவையான அனைத்து நடவடிக்கைகளும்‌ மேற்கொள்ள வேண்டும்‌.


பள்ளி பாதுகாப்பு முன்னேற்பாடுகள்‌


* பள்ளி வளாகத்தினுள்‌ மாணவர்களின்‌ முழுமையான பாதுகாப்பிற்கு பள்ளியின்‌ தலைமை ஆசிரியர்‌ மற்றும்‌ அனைத்து ஆசிரியர்களும்‌ முழுப்‌ பொறுப்பு என்பதனை உணர்ந்து செயலாற்றிட வேண்டும்‌.


*  பள்ளித்‌ தலைமையாசிரியர்‌, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்‌ மற்றும்‌ பெற்றோர்‌ ஆசிரியர்‌ கழக உறுப்பினர்களுடன்‌ கலந்தாலோசித்து தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்‌.


*  பள்ளி வளாகத்தில்‌ பழுதடைந்த கட்டிடங்கள்‌ அல்லது உடைந்து விழும்‌ நிலையில்‌ சுற்றுச்சுவர்‌ எதேனும்‌ இருப்பின்‌, அத்தகைய கட்டிடங்களை மாணவர்கள்‌ அணுகாத வகையில்‌ உரிய நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்திடல்‌ வேண்டும்‌.


*  மாணவர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களின்‌ பயன்பாட்டில்‌ உள்ள கழிவறைகளின்‌ உள்ளேயும்‌ வெளியேயும்‌ கைகளை சுத்தம்‌ செய்வதற்கு ஏற்ற வகையில்‌ போதுமான அளவில்‌ சோப்பு / சோப்பு கரைசல்‌ வைக்கப்பட்டுப்‌ பயன்பாட்டில்‌ இருப்பதை உறுதி செய்திட வேண்டும்‌.


* பள்ளியில்‌ உள்ள அனைத்து மின்சாதனங்கள்‌ மற்றும்‌ மின்சுவிட்சுகள்‌நன்முறையில்‌ செயல்படுகின்றதா என்பதை தலைமையாசிரியர்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌ மூலம்‌ உறுதி செய்திடல்‌ வேண்டும்‌ .


* பள்ளி வளாகத்தினுள்‌ அமைந்துள்ள மரங்களில்‌ ஒடிந்த கிளைகள்‌ மற்றும்‌ கட்டிடங்களுக்கு இடையூறாக அமைந்துள்ள கிளைகளை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்வதுடன்‌ மரங்கள்‌ எளிதில்‌ விழாத வண்ணம் உள்ளதை உறுதிபடுத்திட வேண்டும்‌.


போதை எதிர்ப்பு சார்ந்த தகவல்கள்‌


தலைமை ஆசிரியர்‌, உதவித்‌ தலைமையாசிரியர்‌ முன்னிலையில்‌ காலை வணக்கக்‌ கூட்டம்‌ நடைபெறுதல்‌ வேண்டும்‌. காலை வணக்கக்‌ கூட்டத்தில்‌ மாணவர்களைத்‌ தவறாமல்‌ கலந்து கொள்ளச்‌ செய்ய வேண்டும்‌.


* ஒவ்வொரு வாரமும்‌ செவ்வாய்க்‌ கிழமை அன்று காலை வணக்கக்‌ கூட்டத்தில்‌ 6 முதல்‌ 12 வகுப்பு உள்ள பள்ளிகளில்‌ போதை எதிர்ப்பு சார்ந்த தகவல்கள்‌/கருத்து பரிமாற்றம்‌ சார்ந்து பேச்சு/கவிதை/ சுவரொட்டி/ நாடகம்‌/ பாட்டு/ திருக்குறள் கதைகள்‌ இடம்பெறலாம்‌’’.


இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.