இ-சேவை மையங்கள் மூலம் 23 சான்றிதழ்களைப் பெறலாம் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து வெளியான அறிவிப்பு:


’’2021-2022 ஆம்‌ ஆண்டு பள்ளிக்‌ கல்வித் துறையின்‌ மானியக்‌ கோரிக்கையின்‌போது பள்ளிக்‌ கல்வித் துறை அமைச்சரால்‌ ஏனையவற்றுடன்‌ வரிசை எண்‌-48ல்‌ “மின்னணு சேவைகள்‌" என்ற தலைப்பில்‌, “பள்ளிக்‌ கல்வித்‌ துறையில்‌ பொது மக்கள்‌ மற்றும்‌ மாணவர்களுக்கு வழங்கப்படும்‌ சான்றுகளான நன்னடத்தைச்‌ சான்று, ஆளறிசான்று, தமிழ்‌ வழியில்‌ படித்ததற்கான சான்று உள்ளிட்ட அனைத்துச்‌ சான்றுகளும்‌ அவர்தம்‌ இல்லத்திற்கு அருகில்‌ உள்ள அரசு பொது சேவை மையங்களின்‌ வாயிலாக விண்ணப்பித்து காலவிரயமின்றிப்‌ பெற்றுக்‌ கொள்ளும்‌ திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌” என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.


பள்ளிக்‌ கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பினை செயல்படுத்தும்‌ விதமாக பள்ளிக்‌ கல்வி ஆணையர்‌,‌ பள்ளிக்‌ கல்வித்‌துறையில்‌ உள்ள பல்வேறு இயக்ககங்களின்‌ வாயிலாக இரண்டாம்படி மாற்றுச்‌ சான்றிதழ்‌, மதிப்பெண்‌ பட்டியல்‌ நகல்‌, புலப்பெயர்வு சான்றிதழ்‌ (Migration certificate), கல்வி இணைச்‌ சான்றிதழ்‌ (Equivalence certificate), தமிழ்‌ வழியில்‌ கல்வி பயின்றமைக்கான சான்றிதழ்‌ போன்ற பல்வேறு வகையான சான்றிதழ்களை, தமிழ்நாடு முழுவதும்‌ உள்ள பள்ளிக்‌ கல்வித்‌ துறையைச்‌ சார்ந்த பல்வேறு அரசுப்‌ பள்ளிகள்‌ மற்றும்‌ அரசு அலுவலகங்கள்‌ வாயிலாக மாணவர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ பெற்று வருகின்றனர்‌ என்றும்‌, இச்சேவைகள்‌ சிறப்பான முறையில்‌ அளிக்கப்பட்டு வந்தாலும்‌, மாணவர்கள்‌, பொதுமக்கள்‌ சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கே நேரில்‌ சென்று பெற்று வரும்‌ நிலை இருந்து வருகிறது என்றும்‌ இதனால்‌ சம்பந்தப்பட்ட நபருக்குக் கால விரையம்‌ மற்றும்‌ பண விரையம்‌ ஏற்படுவதுடன்‌, அரசு அலுவலகங்களுக்கும்‌ பணிச் சுமை கூடி வருகிறது என்று தெரிவித்துள்ளார்‌.


மேலும்‌, பள்ளிக்‌ கல்வித் துறையின்‌ பல்வேறு இயக்ககங்களின்‌ வாயிலாகப் பின்வரும்‌ சேவைகள்‌ மாணவர்களுக்கும்‌ பொது மக்களுக்கும்‌ அளிக்கப்பட்டு வருகின்றது எனப் பள்ளிக்‌ கல்வி ஆணையர்‌ தெரிவித்துள்ளார்.










 


தமிழ்நாடு மின்‌ ஆளுமை முகமை செயல்படுத்திவரும்‌ மின்‌ மாவட்டத் திட்டத்தின்‌ ஒரு பகுதியாக அரசு கேபிள்‌ டி.வி நிறுவனம்‌ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள்‌ நடத்திவரும்‌ அரசு இ- சேவை மையங்களின்‌ வாயிலாக மேற்கூறிய சேவைகளை கிடைக்கச்‌ செய்யலாம்‌ என்றும்‌, வருங்காலத்தில்‌ கண்டறியப்படும்‌ சேவைகளையும்‌ அது போன்றே செயல்படுத்தலாம்‌ என்றும்‌ பள்ளிக்‌ கல்வி ஆணையர்‌ தெரிவித்துள்ளார்‌.


மேலே குறிப்பிடப்பட்டுள்ள 23 விதமான சான்றுகள்‌ அனைத்தும்‌ பொது மக்கள்‌ மற்றும்‌ மாணவர்கள்‌, அவர்தம்‌ இல்லத்திற்கு அருகிலுள்ள அரசு சேவை மையங்களின்‌ வாயிலாக விண்ணப்பித்து காலவிரயமின்றிப் பெற்றுக்‌ கொள்ளவும்‌, மேலும்‌ வருங்காலங்களில்‌ புதியதாகக் கண்டறியப்படும்‌ சேவைகளையும்‌ மின்‌ மாவட்டத் திட்டத்தின்‌ ஒரு பகுதியாக தமிழ்நாடு மின்‌ ஆளுமை முகமை வாயிலாக இணைய வழி சேவையாக மாணவர்களுக்கும்‌ பொது மக்களுக்கும்‌ வழங்க எதுவாக உரிய அரசாணை வழங்குமாறு பள்ளிக்‌ கல்வி ஆணையர்‌ அரசைக்‌ கோரியுள்ளார்‌.


பள்ளிக்‌ கல்வி ஆணையரின கருத்துருவினை கவனமுடன்‌ பரிசீலனை செய்து பொது மக்கள்‌ மற்றும்‌ பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும்‌ 23 விதமான சான்றுகள்‌ அனைத்தும்‌அவர்தம்‌ கல்லத்திற்கு அருகிலுள்ள அரசு சேவை மையங்களின்‌ வாயிலாக விண்ணப்பித்து காலவிரயமின்றி பெற்றுக்‌ கொள்ளவும்‌, மேலும்‌ வருங்காலங்களில்‌ புதியதாக கண்டறியப்படும்‌ சேவைகளையும்‌ இணைய வழி சேவையாக மாணவர்களுக்கும்‌ பொது மக்களுக்கும்‌ வழங்கும்‌ திட்டத்தினை செயல்படுத்திட அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது’’.


இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.