TN 12th Result 2022: 10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த குமரி மாவட்டம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் எத்தனையாவது இடம் பிடித்தது..?

மாநில அளவில் பிளஸ்-2 தேர்வில் குமரி மாவட்டம் 13வது இடத்தை பிடித்துள்ளது.

Continues below advertisement

12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 9-வது இடத்தில் இருந்த குமரி மாவட்டம் தற்போது 13ஆவது இடத்திற்கு சென்றுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி மெட்ரிக் பள்ளிகளில் படித்த 10 ஆயிரத்து 959 மாணவர்களும் 11 ஆயிரத்து 916 மாணவ, மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 875 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள்.தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

Continues below advertisement

இதில் 10 ஆயிரத்து 148 மாணவர்களும் 11 ஆயிரத்து 731 மாணவிகள் என மொத்தம் 21 ஆயிரத்து 879 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 92.60 சதவீதம் பேரும் மாணவிகள் 98.45 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சராசரியாக 95.65 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாநில அளவில் பிளஸ்-2 தேர்வில் குமரி மாவட்டம் 13வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்வின் போது 95.06 பிடித்து 9வது இடத்தை பிடித்து இருந்த நிலையில் தற்போது 13 -வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தேர்ச்சி விழுக்காடு அதிகரித்த நிலையிலும் மாவட்ட அளவில் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. குமரி மாவட்டத்திலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதையடுத்து மாணவ-மாணவிகள் அந்தந்த பள்ளிகளில் தேர்வு முடிவுகளை பார்ப்பதற்காக குவிந்திருந்தனர். பல மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை செல்போனில் பார்த்து தெரிந்து கொண்டனர். 10ம் வகுப்பு தேர்வை பொறுத்தமட்டில் குமரி மாவட்டத்தில் 11405 மாணவர்களும் 11 ஆயிரத்து 580 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 985 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 10893 மாணவர்களும் 11 ஆயிரத்து 452 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 345 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 95.51 சதவீதம் பேரும் மாணவிகள் 98.89 சதவீதம் பெரும் வெற்றி பெற்றுள்ளனர். சராசரியாக 97.21 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் அதிகமானோர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்ச்சி விழுக்காட்டை பொறுத்தமட்டில் 10ம் வகுப்பு தேர்வில் குமரி மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்வில் மாநில அளவில் 10ம் வகுப்பு தேர்வில் குமரி மாவட்டம் 98.08 சதவீதம் பெற்று 2-வது இடம் பிடித்து இருந்த நிலையில் தற்போது முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளது. கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு நடைபெறவில்லை.

குமரி மாவட்டம் ஏற்கனவே மாநில அளவில் கல்வி அறிவு நிறைந்த மாவட்டம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மாநில அளவில் சாதனை படைத்துள்ளது. சாதனை படைத்த பள்ளி ஆசிரியர்களை கல்வி அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். கடந்த 2019-ம் கல்வியாண்டில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் கிடைக்கப் பெற்ற தேர்ச்சி விழுக்காட்டை விட இந்த கல்வியாணடில் தேர்ச்சி விழுக்காடு குறைந்து இருந்தாலும் மாநில அளவில் முதலிடம் பிடித்து உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த 2012 ஆம் கல்வி ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டம் பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழக அளவில் முதல் இடம் பிடித்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மீண்டும் குமரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola