சென்னை போருரில் ஶ்ரீ இராமசந்திரா மருத்துவக் கல்லூரியில் நிறுவன தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள், ஊழியர்கள், மாணவர்கள் என 307 பேருக்கு தங்க பதக்கங்கள் பரிசாக வழங்கி நிர்வாகம் கவுரவித்தது. 


போருர் ஸ்ரீ இராமசந்திரா மருத்துவக் கல்லூரியில் நிறுவனத்தின் மற்றும் பல்கலைகழக விழா கொண்டாப்பட்டது. கல்லூரி வேந்தர் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


இதில் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு துறையிலும் 30 ஆண்டுகள், 20 ஆண்டுகள், 10  ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களை  கவுரவிக்கும் வகையில் ஒவ்வொருவருக்கும் தங்கத்தால் ஆன பதக்கம் பரிசாகா வழங்கி கவுரவிக்கப்பட்டது. 


அதேபோல் அலுவலக உதவியாளர் உட்பட 10 க்கும் மேற்பட்டோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி விழா மேடை நாற்காலியில் அமர வைத்து கவுரவிக்கப்பட்டது. முன்னதாக விழாவில் மாணவர்களின் கண்கவர் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.