சென்னை மாவட்டத்தில் சனிக்கிழமை அன்று பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.


மழையால் பள்ளிகளுக்கு விடப்பட்ட தொடர் விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமை (டிசம்பர் 3) அன்று வகுப்புகள் நடக்கும் என்று சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்க்ஸ் தெரிவித்துள்ளார். திங்கள் கிழமை அன்று பின்பற்றப்படும் பாடவேளை வகுப்புகள் டிசம்பர் 3ஆம் தேதி அன்று பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.