நீட், JEE, CUET ஆகிய நுழைவுத் தேர்வுகள் இணைப்பு குறித்து யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் பிடிஐ நிறுவனத்துக்குப் பேட்டி அளித்துள்ளார். 


இதுகுறித்துப் பேசிய அவர், ''CUET நுழைவுத் தேர்வை நடத்துவதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு, பின்னடைவுகள் இல்லை. ஆனால் பாடங்களே. விரைவில் அந்தக் குறைகள் சரிசெய்யப்படும். 


பல்வேறு வகையான நுழைவுத் தேர்வுகளை எழுதுவதன் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் சுமையைக் குறைக்கத் திட்டமிட்டு வருகிறோம். எனினும் இந்த விவகாரத்தில் அவசரப்பட முடியாது. முறையாகத் திட்டமிட வேண்டியது அவசியம். 


இதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நுழைவுத் தேர்வுகளை எழுதுவது குறித்து வல்லுநர் குழு கலந்து ஆலோசிக்க வேண்டும்'' என்று யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.




நீட் தேர்வு


எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ் (சித்தா), ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது.  ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. 


அதேபோல மத்திய உயர் கல்வி நிலையங்களில் பொறியியல் படிக்க, JEE என்னும் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. இதையும் என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமையே நடத்துகிறது. 


இந்த நிலையில், அண்மையில் க்யூட் எனப்படும் CUET பொது நுழைவுத் தேர்வு அமலுக்கு வந்தது. மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு ( CUET) 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. என்சிஇஆர்டி 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு அண்மையில் யுஜிசி சார்பில் வெளியாகி, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தேர்வு நடைபெற்றது. 


இந்தியாவின் முதன்மையான தேர்வுகள்






 

*




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண