Just In

இனி மாதம் ஒரு முறை... மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன மயிலாடுதுறை கலெக்டர் - என்ன தெரியுமா?

தொடங்கிய எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம்; கட்டணம், தகுதி, வழிமுறைகள் என்னென்ன?

NEET PG 2025: ஆக.3-ல் நீட் முதுகலைத் தேர்வு; உச்ச நீதிமன்றம் அனுமதி- என்னென்ன ஏற்பாடுகள்?

பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 3 லட்சம் பேர் விண்ணப்பம்!

TNPSC Group 1: குரூப் 1 தேர்வுக்கு 10 நாட்கள் முன்னதாகவே… அதகளப்படுத்திய டிஎன்பிஎஸ்சி- இப்போ என்ன அப்டேட்?
TN 12th Revaluation: தொடங்கிய பிளஸ் 2 தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? இந்த மாவட்டங்களுக்கு முக்கிய மாற்றம்!
MBBS : திருச்சியை சேர்ந்த 9 மாணவிகள் உள்பட 13 அரசு பள்ளி மாணவர்கள்.. எம்பிபிஎஸ் படிப்பில் இடம் பிடித்து அசத்தல்!
திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 13 பேருக்கு எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்தது.
Continues below advertisement

திருச்சி 13 பேருக்கு எம்.பி.பி.எஸ். படிக்க இடம்
திருச்சி மாவட்டத்தில் 2023-ம் ஆண்டிற்கான மருத்துவ தகுதி தேர்வில் (நீட்) 110 மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றார்கள். அவர்களில் 9 மாணவிகள் உள்பட 13 அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த மாணவ-மாணவிகள் கலந்தாய்வு மூலம் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பை படிப்பதற்கு கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவக்கல்லூரிகளை தற்போது தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் ஸ்ரீதர் (முசிறி), அவனித் (உப்பிலியபுரம்) ஆகியோருக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியிலும், சந்திரன் (டாப் செங்காட்டுப்பட்டி), நித்தீஷ் (திருச்சி மாநகராட்சி பள்ளி) ஆகியோருக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரியிலும் படிக்க இடம் கிடைத்துள்ளது. இதுபோல் மாணவிகள் தேவதர்சினி (துறையூர்) விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரியையும், தீபிகா (துறையூர்) திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியையும், அக்ஷயா (துறையூர்) தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரியையும், ஜமுனா (வாளையூர்) கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரியையும் தேர்வு செய்துள்ளனர்.
திருச்சி மாநகராட்சி பள்ளி மாணவி ரக்ஷிதா கோவை பி.எஸ்.சி. மருத்துவக்கல்லூரியையும், மாணவிகள் குணவதி (தண்டலைபுத்தூர்), ரோகிணி (மண்ணச்சநல்லூர்) ஆகியோர் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரியையும், திருச்சி மாநகராட்சி பள்ளி மாணவி சிந்துஜா திருச்சி தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரியையும், ஓவியா (கண்ணணூர்) கிருஷ்ணகிரி செயிண்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரியையும் தேர்வு செய்துள்ளனர். இதில் 3 பேர் திருச்சி மாநகராட்சி பள்ளியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவ-மாணவிகளை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சிவக்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Continues below advertisement
Continues below advertisement
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.