இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் எனப்படும் எல்ஐசியில் உதவிப்பொறியாளர்கள் மற்றும் உதவி நிர்வாக அதிகாரிப் பணியிடங்களை நிரப்புவதற்கானத்  தேர்வு ஆகஸ்ட் 28-ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இந்திய மக்கள்  காப்பீடு செய்யவேண்டும் என்று நினைத்தாலே முதலில் அவர்களின் நினைவுக்கு வருவது எல்ஐசி மட்டும் தான். அந்தளவிற்கு மக்களின் நம்பிக்கையினை பல ஆண்டுகளாக பெற்றுள்ளது. மத்திய அரசின் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணிபுரிந்துவரும் நிலையில், உதவிப்பொறியாளர் மற்றும் உதவி நிர்வாக அதிகாரி என 218 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருந்தது. உதவிப்பொறியாளர் (AE) பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிஇ, பி.டெக் அல்லது பி.ஆர்க், எம்இ அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும் எனவும், உதவி நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு ஏதாவது ஒரு துறையில் இளங்கலை மற்றும் பணி அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்பணியிடங்களுக்கு மேற்கண்ட தகுதியும் ஆர்வமும் உள்ள  நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.



மேலும் கடந்த ஏப்ரல் 4, 2020 அன்று ஆன்லைனில் எழுத்துத்தேர்வு நடத்தித் தகுதியுள்ள நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட தேதியில் தேர்வு நடைபெறவில்லை. இந்நிலையில் தான் மீண்டும் உதவிப்பொறியாளர் (Assistant Engineer) மற்றும் உதவி நிர்வாக அதிகாரிக்களுக்கான ( Assistant administrative officer) ஆன்லைன் தேர்வு வருகின்ற ஆகஸ்ட் 28, 2021 அன்று நடைபெறும் என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர்கள் மேலும் புதுப்பிப்புகளுக்கு  எல்ஐசியில் அதிகாரப்பூர்வ வலைத்தளமான - licindia.in என்பதில் தெரிந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நடைபெறும் விதிமுறைகளையும் அறிவித்துள்ளது. எனவே இந்நேரத்தில் எப்படி தேர்வு நடைபெறும் என இங்கு நாம் தெரிந்துகொள்வோம்.


எல்ஐசியில் பல்வேறு பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு நடைபெறும் முறை:


எல்ஐசியில் உதவிப்பொறியாளர் மற்றும் உதவி நிர்வாக அதிகாரியாக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஆன்லைன் மூலம் முதன்மைத்தேர்வு மற்றும் பிரதானத்தேர்வு ( preliminary and main exam) நடைபெறும். முதலில்,முதன்மைத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்தத் தேர்விற்கு தகுதியாவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


முதன்மைத்தேர்வில் 100 கேள்விகள் multiple-choice questions ஆக கேட்கப்பட்டிருக்கும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கேள்விகள் இடம் பெற்றிருக்கும். இதில் தேர்ச்சிப்பெற்றால் மட்டுமே  அடுத்ததாக பிரதானத்தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.



பிரதானத் தேர்வின் வடிவம் ( Main exam format)


முதன்மை தேர்வில் தேர்ச்சிப்பெற்றவர்களுக்கு பிரதான தேர்வு நடைபெறும். MCQs and descriptive type ல் கேள்விகள் இடம் பெற்றிருக்கும். இதற்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.  முதன்மை மற்றும் பிரதானத் தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு அடுத்தப்படியாக நேர்காணல், ஆவண சரிப்பார்ப்பு மற்றும் மருத்துவத்தேர்வு நடைபெறும். இதில் அனைத்தும் தேர்ச்சிப்பெற்றால் மட்டுமே எல்ஐசியில் உதவிப்பொறியாளர் மற்றும் உதவி நிர்வாக அதிகாரியாக பணியமர்த்தப்படுவார்கள். இவர்களுக்கு மாதம் ரூ.57 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்:ளது.