புதுச்சேரி: 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் பாடம் நடத்தக்கூடிய இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) நடத்தப்படுகிறது. இதன் காரணமாக புதுச்சேரியில் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு - பள்ளிக்கு விடுமுறை
1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் பாடம் நடத்தக்கூடிய இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) நடத்தப்படுகிறது. இதன் காரணமாக புதுச்சேரியில் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி விடுத்துள்ள சுற்றறிக்கை:
புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் மாதம் கடும் வெப்ப அலை வீசியது. அதன் காரணமாக ஏப்ரல் 28, 29 மற்றும் 30ம் தேதி ஆகிய மூன்று தினங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறைகளை ஈடு செய்ய கடந்த ஆகஸ்ட் 2 மற்றும் 30ம் தேதிகளில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயக்கப்பட்டது. ஏப்ரல் 30ம் தேதி விடுப்பை ஈடு செய்ய நாளை 15ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக பள்ளிக் கல்வித்துறை சார்பில், அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நாளை 15ம் தேதி தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான தகுதி (டெட்) தேர்வு நடக்கிறது. இத்தேர்வை, புதுச்சேரியை சேர்ந்த பெரும்பாலான ஆசிரியர்கள் எழுத உள்ளனர். அதனால், நாளை 15ம் தேதி விடுமுறை அளிக்க ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனையேற்று, நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக வரும் ஜனவரி 3ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று, புதன்கிழமை கால அட்டவணைப்படி வகுப்பகள் நடைபெறும். இவ்வாறு, சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு
புதுச்சேரி TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) என்பது புதுச்சேரி அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் பள்ளிக் கல்வி இயக்குநரகத்தால் நடத்தப்பட்டது. இது புதுச்சேரியின் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கற்பிக்க தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு தகுதிச் சான்றிதழ்களை வழங்குவதற்காக நடத்தப்படும் மாநில அளவிலான நுழைவுத் தேர்வாகும்.
1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் பாடம் நடத்தக்கூடிய இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே ஆசிரியராக பணியாற்றுவதற்கு தகுதி படைத்தவர்கள் என்ற சூழல் உருவாகிவிட்டது. அந்த வகையில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில் தாள்-1 தேர்வும், 6 முதல் 8-ம் வகுப்பு வரையில் தாள்-2 தேர்வும் நடத்தப்படுகிறது.
அதன்படி, நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்காக விண்ணப்பிக்கவும் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதில் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ள தாள்-1 தேர்வுக்காக 1 லட்சத்து 7 ஆயிரத்து 370 பேரும், நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) தாள்-2 தேர்வுக்காக 3 லட்சத்து 73 ஆயிரத்து 438 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.