மே மாதம் நடைபெற உள்ள 10-ம் வகுப்புத் தேர்வை எழுதும் தனித் தேர்வர்கள் நாளை பிற்பகல் 2 மணி முதல் பொதுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 


இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளபடி, ''நடைபெறவுள்ள மே 2022 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் (தட்கல் உட்பட) நாளை 20.04.2022 (புதன் கிழமை) பிற்பகல் 2 மணி முதல் என்ற இணையதளத்தின் வாயிலாக தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்யும் முறை:
 
தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று  “HALL TICKET” என்ற வாசகத்தினை க்ளிக் செய்தால் தோன்றும் பக்கத்திலுள்ள “SSLC PUBLIC EXAMINATION MAY 2022 - HALL TICKET DOWNLOAD” என்ற வாசகத்தினை க்ளிக் செய்து தோன்றும் பக்கத்தில், தங்களது விண்ணப்ப எண் (Application Number) / நிரந்தரப் பதிவெண் (Permanent Register Number) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth)பதிவு செய்து, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 




மே 2022 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் (Science Practical Examinations) 27.04.2022 முதல் 29.04.2022 வரை, அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளன. 


அறிவியல் பாட செய்முறைத்தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியரை அணுகி அறிந்துக்கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். 


மே 2022 பொதுத்தேர்விற்கான கால அட்டவணையை  www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று அறிந்துகொள்ளலாம்''.


இவ்வாறு  அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண