தமிழ்நாடு  ஆதிதிராவிடர்  வீட்டு  வசதி  மற்றும்  மேம்பாட்டு  கழகம்  (தாட்கோ) மற்றும் சென்னை பெட்ரோலியம்  கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL)  நிறுவனம்   இணைந்து   ஆதிதிராவிடர் , பழங்குடியினர் மற்றும்   பிற  சமூகத்தை சார்ந்த   மாணவர்களுக்கு  அகில  இந்திய  நுழைவுத் தேர்விற்கு  (JEE Entrance Exam)   பயிற்சி  வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சியினை  பெற  பன்னிரெண்டாம்   வகுப்பில்   இயற்பியல்,  வேதியியல்  மற்றும்  கணக்கு  பாடங்களில்  ஆதிதிராவிடர்   மற்றும்  பழங்குடியின   இனத்தைச்  சார்ந்த  மாணவர்கள்  65  சதவீதமும்   மற்றும்   பிற  சமூகத்தை  சார்ந்த    மாணவர்கள்  75  சதவீதமும்   மதிப்பெண்  பெற்றிருக்க   வேண்டும்.   குடும்ப   ஆண்டு   வருமானம்   ரூ.4    இலட்சத்திற்கு   மிகாமல்   இருக்க வேண்டும்.     இப்பயிற்சியானது  மாணவர்களுக்கு   மட்டும்  வழங்கப்படவுள்ளது.  

Stalin on NEET: நீட் தேர்வு விவகாரம்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...

இப்பயிற்சி  பெற   விரும்பும் தேனி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் www.tahdco.com    என்ற   தாட்கோ  இணையதளத்தில்   பதிவு    செய்து   கொள்ளலாம்.    மேலும்  சென்னை பெட்ரோலியம்  கார்ப்பரேஷன்   லிமிடெட்  நிறுவனம்  நடத்தும்  நுழைவுத்தேர்வில்  தேர்ச்சி  பெறுபவர்கள்  மட்டும்  மணலியில் (சென்னை  மாவட்டம்) உள்ள  சென்னை  பெட்ரோலியம்  கார்ப்பரேஷன்  லிமிடெட்   பாலிடெக்னிக்  கல்லூரியில்  11 மாதங்கள் தங்கிப் பயிலவும்,      உணவு    மற்றும்  தங்குமிடத்திற்கான   கட்டணத்தொகையும்,    பயிற்சிக்கான  தொகையும்    சென்னை  பெட்ரோலியம்   கார்ப்பரேஷன்   நிறுவனத்தால்  வழங்கப்படும்.   

Reciprocal Tariffs: பரஸ்பர வரி-ன்னா என்ன.? எந்தெந்த நாட்டுக்கு எவ்வளவு.? ட்ரம்ப் விதிச்ச வரி பத்தி தெரிஞ்சுக்கோங்க...

மேலும்    கடந்த  ஆண்டில்  30   மாணவர்கள்   தங்கி  பயின்று    அதில் 26    மாணவர்கள்   தேர்ச்சி பெற்று   IIT,   NIT  போன்ற  தேசிய   கல்வி   நிறுவனங்களில்    சேர  தகுதி பெற்றுள்ளார்கள். மேலும்  விவரங்களுக்கு, மாவட்ட   மேலாளர்,    தாட்கோ,  அறை  எண்.73,  மாவட்ட ஆட்சியர்  அலுவலகம், தேனி அவர்களை நேரிலோ அல்லது 04546-260995 என்ற தொலைபேசி  எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.