சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில், மாணவியரின் தொழில்நுட்பக் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் 'ட்ரோனோவா 2026' (DRONOVA 2026) என்ற பிரம்மாண்டமான ட்ரோன் கண்காட்சி மற்றும் தொழில்நுட்ப நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

Continues below advertisement

கற்பனைத் திறனில் இருந்தே கண்டுபிடிப்புகள்

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (TIDCO) மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி ஐ.ஏ.எஸ். பங்கேற்று மாணவியரிடையே உரையாற்றினார். அப்போது அவர், "புதிய கண்டுபிடிப்புகள் மனிதனின் கற்பனைத் திறனில் இருந்தே தொடங்குகின்றன. மாணவியர் தங்களின் சிந்தனைகளை ஆக்கப்பூர்வமாக விரிவுபடுத்த வேண்டும்.

ட்ரோன் தொழில்நுட்பத்தை வழக்கமான பயன்பாடுகளுக்குத் தாண்டி, புதிய கோணங்களில் சிந்திக்க முன்வர வேண்டும். ட்ரோன்கள் நமது செயல்திறனை மேம்படுத்துவதற்கான சக்திவாய்ந்த கருவிகளாக மட்டுமின்றி, நெருக்கடியான நேரங்களில் மனித உயிர்களைக் காப்பாற்றுவதிலும் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன" என்று பேசினார்.

Continues below advertisement

நவீனத் தொழில்நுட்பங்களின் அவசியம்

எத்திராஜ் கல்லூரி அறக்கட்டளையின் தலைவர் வி.எம். முரளிதரன் தனது உரையில், "பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலையான நீடித்த முன்னேற்றத்தை உந்தித் தள்ளுவதற்கு, ட்ரோன்கள் போன்ற நவீனத் தொழில்நுட்பங்களை நாம் கைக்கொள்ள வேண்டியது அவசியம்" என்று குறிப்பிட்டார்.

கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் உமா கௌரி பேசுகையில், அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பச் சூழலில், எதிர்கால உலகிற்குத் தேவையான நவீனத் திறன்களை மாணவியர் வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

100-க்கும்மேற்பட்டட்ரோன்மாதிரிகள்

இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, 100-க்கும் மேற்பட்ட இயங்கும் ட்ரோன் மாதிரிகள் (Drone models) மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் கண்காட்சி அமைந்திருந்தது. இதில் ட்ரோன்களின் நேரடிச் செயல்விளக்கங்கள் செய்து காட்டப்பட்டன. இது பார்வையாளர்களுக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தின் நடைமுறைப் பயன்பாடுகளைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.