163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசித் தேதி ஆகும். இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.


முன்னதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறும்போது, சிபிஎஸ்இ முடிவுகள் வெளியாகும் நாளில் இருந்து அடுத்த 5 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான இடங்கள் ஏற்கெனவே 25 சதவீத அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களுக்கும் இடம் கிடைக்க அரசு பெரும்பாலும் முயற்சி செய்யும்'' என்று தெரிவித்திருந்தார்.


கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?


தமிழகத்தில்‌ உள்ள 163 அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர்‌ சேர்க்கைக்கான (2022-2023) விண்ணப்பங்களை https://tngasa.org/https://tngasa.in/என்ற இணையதள முகவரிகளில்‌ பதிவு செய்யலாம்‌.


இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள்‌ கல்லூரி உதவி மையங்கள் மூலம்‌ விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின்‌ பட்டியல்‌ மேற்குறித்த இணையதள முகவரியில்‌ வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மையங்களிலும்‌ போதிய அளவில்‌ கொரோனா தடுப்பு மற்றும்‌ பாதுகாப்பு நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன.


ஒரு கல்லூரிக்கு விண்ணப்பக்‌ கட்டண விவரம்‌


விண்ணப்பக்‌ கட்டணம்‌ - ரூ.48/, பதிவுக்‌ கட்டணம்‌ - ரூ.2. 
எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக்‌ கட்டணம்‌ ஏதுமில்லை. பதிவுக்‌ கட்டணம்‌ - ரூ.2/- மட்டும்‌ செலுத்த வேண்டும்.


விண்ணப்பம்‌ மற்றும்‌ பதிவுக்‌ கட்டணம்‌ 


விண்ணப்பக்‌ கட்டணம்‌ மற்றும்‌ பதிவுக்‌ கட்டணத்தை விண்ணப்பதாரர்கள்‌ மூலம்‌ இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம்‌.




கட்டணம்‌ செலுத்துவது எப்படி?


விண்ணப்பக்‌ கட்டணம்‌ மற்றும்‌ பதிவுக்‌ கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் ‌Credit Card/ Debit Card/ Net Banking  மூலம்‌ 
இணையதள வாயிலாகச் செலுத்தலாம்‌. இணையதள வாயிலாகக்‌ கட்டணம்‌ செலுத்த இயலாத மாணாக்கர்கள்‌ கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில்‌ “The Director, Directorate of Collegiate Education, Chennai - 6” என்ற பெயரில்‌ வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும்‌ செலுத்தலாம்‌.


இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 7 கடைசித் தேதியாக இருந்தது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, இன்று (ஜூலை 27) கடைசித் தேதியாக உள்ளது. இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண