ஆட்டோவில் சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் பெண்கள் பாதுகாப்புக்கென்று கடுமையான சட்டங்களையும், நடவடிக்கைகளையும் எடுத்து வரும் நிலையில் ஆங்காங்கே உடல் ரீதியான, மன ரீதியாக தாக்குதல்கள்  தினசரி பெண்கள் மீது நடைபெற்று வருகின்றது. அப்படி ஒரு சம்பவம் தான் ஹரியானாவில் நடைபெற்று பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஹரியானா மாநிலம் ஃபதிராபத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் உதவியாளராக பணியாற்றி வருகிறார். அவர் கடந்த ஞாயிற்று கிழமை இரவு 8 மணியளவில் வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். சிறிது தூரம் நடந்து சென்றதால் இரவு 10 மணியளவில் டவுன்பார்க்கிற்கு அருகே இருக்கும் தனது வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளார். அப்போது ஆட்டோவில் யாரும் இல்லை. இதையடுத்து போகும்பாதையில் இரண்டு ஆண்கள் அந்த ஆட்டோவில் ஏறியுள்ளனர். இதையடுத்து ஆட்டோ டிரைவர் உட்பட 3 ஆண்களும் ப்ளான் செய்து ஆட்டோவை புதர் பகுதிக்கு திருப்பியுள்ளனர். 


தொடர்ந்து ஆட்டோவில் ஏறிய இரண்டு ஆண்களும் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், ஆட்டோ டிரைவரும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். ஆனால் அப்பெண் அவரிடம் இருந்து தப்பித்து மெயின் ரோட்டிற்கு வந்து காப்பாற்றுங்கள் என கத்தியுள்ளார். 


அப்போது அங்கு வந்த ஒருவரின் உதவியோடு காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது சனோஜ், விஷ்ணு என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவ்விருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாகிய ஆட்டோ டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 




மேலும் படிக்க:  திருப்பூரில் பயங்கரம்.. வீட்டின் அருகே மது அருந்தியவரை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் வெட்டிக்கொலை