திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு கிராமத்தில் வீட்டின் அருகே மது அருந்திய நபரை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். ரத்தினாம்பாள், புஷ்பவதி, மோகன் மற்றும் செந்தில் குமார் ஆகியோர் போதை ஆசாமியால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  இதனால் அந்த கிராமத்தின் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.