Crime: உத்தர பிரதேசத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாட்டையே உலுக்கிய கொடூர சம்பவம்


உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் சொகுசு ஹோட்டல் ஒன்றில் 25 வயதான இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறது. கடந்த 18 மாதங்களாக ஹோட்டலில் பணிபுரிந்து வருகிறார். அப்போது, கடந்த சனிக்கிழமை இரவு பணியில் இருந்துள்ளார். அப்போது, அங்கு இருக்கும் ஒரு அறையில் இருந்து இந்த பெண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அங்கு சென்ற அந்த பெண்ணுக்கு ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.  அந்த அறையில் 5 பேர் இருந்துள்ளனர். இவர்கள் அந்த பெண்ணை கொடூரமாக பலமுறை அடித்துள்ளனர். பின்னர், அந்த பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக மது கொடுத்துள்ளனர்.  அந்த பெண் மறுப்பு தெரிவித்ததால், அவரை பலமுறை அடித்துள்ளனர். பின்னர், அந்த பீர் பாடிலால் தலையில் பலமுறை அடித்துள்ளதாக தெரிகிறது.  பின்னர், அந்த பெண்ணை ஐந்து பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 


வீடியோ எடுத்து மிரட்டல்


இதையெல்லாம் பதிவு செய்து இணையத்தில் அந்த கும்பல் வெளியிட்டது. பின்னர், அந்த ஹோட்டலில் இருந்து ஐந்து பேரும் தப்பிச் சென்றுள்ளனர்.  இந்த சம்பவம் பாதிக்கப்பட்ட போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் ஐந்து பேரை கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட போலீசாரிடம் கூறுகையில்,  "ஹோட்டலில் ஒரு அறையில் தங்கிருந்த ஐந்து பேர் என்னை அழைத்துள்ளனர். அங்கு, தங்களுடன் வருமாறு  அழைத்தனர். அதற்கு நான் மறுக்கவே, என்னை வலுக்கட்டாயமாக அறைக்குள் அழைத்தனர். இதனால், நான் கூச்சலிட்டு உதவி கேட்டோன். ஆனால், அந்த ஐந்து பேரும் உள்ளே இழுத்து வலுக்கட்டாயமாக வாயில் மதுவை ஊற்றினர். பிறகு, பீர் பாட்டிலால் தலையில் அடித்துள்ளனர். பலமுறை என்னை தாக்கினர். பின்னர், என்னை அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது" என்றார்.


"தயவு செய்து காப்பாற்றுங்கள்”


இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியானது. அதில், அந்த பெண், ”தயவு செய்து காப்பாற்றுங்கள் (please help me) என அலறுவதும், அவரை ஒரு ஆண்டு உள்ளே இழுப்பதும், அவர் தரையில் கிடப்பதும், காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும்,, "இவர்கள் எல்லாரையும் கைது பண்ணுங்க. இவர்கள் எல்லாரும் பாலியல் தொழில் செய்றாங்க. என்னை இதற்கு வலுக்கட்டாயமாக அழைத்து மிரட்டியுள்ளனர்" என்று வீடியோவில் அந்த பெண் பேசியிருக்கிறார். பின்னர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருவதாகவும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.




மேலும் படிக்க


Crime: 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை... கழுத்து அறுத்து கொலை செய்த கொடூரம்... ஷாக்!