விழுப்புரம் மாவட்டம்  கண்டமங்கலம் அருகே உள்ள ரசபுத்திரப் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் மகன் பிரகாஷ் (35). இவரும், கண்டமங்கலத்தை சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண்ணும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அப்போது கடந்த 2019ஆம் ஆண்டில் அந்த பெண்ணிடம் பிரகாஷ் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க: எல்லா புகழும் அமீரையேச் சேரும்...! பருத்திவீரன் குறித்து நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி...!




பின்னர், அந்த பெண், பிரகாஷிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி கேட்டுள்ளார், அனால் பிரகாஷ் திருமணம் செய்துகொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் அந்த பெண்ணிற்கு கொலை மிரட்டலையும் விடுத்துள்ளார். பிரகாஷ் திருமணம் செய்ய மறுத்து விட்டது குறித்து பாதிக்கப்பட்ட பெண், விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்  நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரகாஷை கைது  செய்தனர்.


Jayakumar Arrested: "சாவடிங்கடா" என்ற ஜெயக்குமார்!வெளியே விடாத நீதிமன்றம்!



Jayakumar Arrest: டேய்...சட்டைய கழட்டுடா To சார்..கைலி மாத்திக்கறேன்! ஜெயக்குமார் கைது -பரபரப்பு பின்னணி


இந்த நிலையில் விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 25 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 3 மாத காலத்திற்குள் 2 லட்சத்தை இழப்பீடாக பிரகாஷ் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட பிரகாஷ், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சங்கீதா ஆஜரானார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர