விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அருகே உள்ள எஸ். மேட்டுப்பாளையம் கிராமத்தில் மது போதையில் சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசி ரகளையில் ஈடுபட்ட இருவரை வளவனூர் போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அருகே உள்ள எஸ்.மேட்டுப்பாளையம் கிராமத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையை புதுச்சேரியை சார்ந்த பிரபல ரவு கெளதம் மற்றும் மேட்டுப்பாளையம் கிராமத்தை சார்ந்த கபிலன் ஆகியோர் தென்பெண்னையாற்று மேம்பாலம் அருகேயுள்ள கபிலனின் வீட்டில் மது அருந்தியுள்ளனர். மது அருந்தும் போது பிரபல நாட்டு வெடிக்குண்டு செய்வதில் கைதேர்ந்த ரவுடியான கெளதம் நாட்டு வெடிகுண்டு செய்துள்ளார்.


நாட்டு வெடிகுண்டு செய்ததை கபிலன் மற்றும் கெளதம் ஆகிய இருவரும் வீட்டின் அருகேயுள்ள மேம்பாலத்தின் சாலையில் மது போதையில் வீசி ரகளையில் ஈடுபட்டனர். அதிவேகத்துடன் சத்தம் கேட்டத்தையடுத்து கபிலன் வீட்டின் அருகே வசிப்பவர்கள் பதறியடித்து கொண்டு வளவனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த வளவனூர் போலீசார் நாட்டு வெடிகுண்டு வீசிய இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் புதுச்சேரியில் பிரபல ரவுடிவுடன் மது போதையில் நாட்டு வெடிகுண்டு வீசி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.