விழுப்புரம்: செஞ்சி அருகே கார்- இருசக்கர வாகனம் மோதி கொண்ட விபத்தில் தந்தை மகன் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


3 பேர் உயிரிழப்பு:


கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அகமது என்பவர் தனது குடும்பத்துடன் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு பின்னர் புதுச்சேரி கிருஷ்ணகிரி சாலை வழியாக கிருஷ்ணகிரிக்கு சென்று கொண்டிருந்த பொழுது செஞ்சி அடுத்துள்ள நங்கிலிகொண்டான் என்ற இடத்தில் இவரது கார் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த சேர்விளாகம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி வேலை செய்யும் தந்தை ஆறுமுகம், அவரது மகன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மொடையூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி மணி ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தர்.


போலீஸ் விசாரணை:


பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செஞ்சி காவல்துறையினர் உயிரிழந்த 3 உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கார் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தை மகன் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது சம்பந்தமாக செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து நடந்தது சம்பந்தமாக விசாரணை செய்து வருகின்றனர்.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண