விழுப்புரம் : மரக்காணம் அருகே இடிதாக்கி தாய் உயிரிழந்த நிலையில் மகன் படுகாயம் அடைந்துள்ளார்.


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள முன்னூர் பள்ளத்தெருவை சேர்ந்த சின்னராசு மனைவி அலமேலு (45).இவருக்கு இரண்டு பெண், இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். அவரது கணவர் உயிரிழந்த நிலையில், விவசாய வேலைகளை அலமேலு கவனித்து வந்துள்ளார்.


இந்நிலையில் மூத்த மகன் குமரன் (32) என்பவருடன் அதே பகுதியில் நடு ஏரி அருகே உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்துவிட்டு, மாலை வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. மழையில் கையில் (அலுமினிய) அன்னக்கூடை எடுத்துக்கொண்டு அலமேலு அவரது மூத்த மகன் குமரனுடன் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இடி தாக்கியது.


இதில் அலமேலு உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் குமரன் காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் குமரனை மீட்டு, சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பிரம்மதேசம் காவல் நிலைய போலீசார் அலமேலு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை செய்து வருகின்றனர். மரக்காணம் அருகே இடி தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண