விழுப்புரம்: திண்டிவனம் அருகே  அதிமுக ஒன்றிய செயலாளர் மற்றும் மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் ஒரே இரவில் வீட்டின் பூட்டை  உடைத்து 50 பவுன் நகை பணம் மற்றும் ரூ.2.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ALSO READ | Maaveeran Review: கோழை டூ வீரன்... அட்ஜஸ்ட்மெண்ட் டூ ஆக்‌ஷன்... மேஜிக் செய்ததா மாவீரன்? ஃபர்ஸ்ட் க்ளாஸ் திரை விமர்சனம்!


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தாதாபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் அதிமுக ஒன்றிய செயலாளராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு சொந்த வேலை காரணமாக திருப்பதி வரை  சென்று விட்டு, மறுநாள் காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீடு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 32 சவரன் நகை  2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து  வெள்ளிமேடு பேட்டை போலீசருக்கு தகவல் அளித்தார்.  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.




மேலும், அதே பகுதியை சேர்ந்த முத்து என்பவர்  சென்னைக்கு சென்றுள்ளார்.  அவரது வீட்டையும் உடைத்து மர்ம நபர்கள் 15 பவுன் தங்க நகை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவையை திருடி சென்றுள்ளனர். அதேபோல சுரேஷ் என்பவர் வீட்டில், பூட்டு உடைக்கப்பட்டு 10 பட்டு புடவை, வெண்கலம் சொம்பு ஆகியவை திருட போய் உள்ளது. மேஸ்திரி லட்சுமணன் என்பவர் வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு இரண்டு பவுன் நகை மற்றும் பத்திரம் ஆகியவை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். ஒரே இரவில் நான்கு பேர் வீட்டில் பணம் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து திண்டிவனம் டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் அந்த பகுதியில் நேரில் விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவேற்கப்பட்டு கைரேகையை சேகரித்து  வருகின்றனர்.






ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண