விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள சாய்லட்சுமி நகரில் வசித்து வருபவர் குமார். இவர் கருவம்பாக்கம் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி லதா விழுக்கம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று வழக்கம் போல கணவன், மனைவி இருவரும் குழந்தைகளை பள்ளிக்கு அனுவிட்டு, இருவரும் அவர்களது பள்ளிக்கு சென்றனர்.




மாலை 5 மணியளவில் வீட்டிற்கு திரும்பிய லதா வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 40 சவரன் நகை, கால் கிலோ வெள்ளி, பத்தாயிரம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் கொள்ளை நடந்த வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் மற்றும், மோப்பநாய் உதவியுடன் விசாரனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவான ஹார்ட் டிஸ்க்கையும் கொள்ளையர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள ரோசனை காவல்துறையினர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.




குடிக்க தண்ணீர் கேட்டு பேச்சு கொடுத்து மூதாட்டியின் நகை அபேஸ்.....


செஞ்சியை அடுத்த நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி லட்சுமி (வயது 75). நேற்று மாலை லட்சுமி, வீட்டின் வெளியே இருந்தார். அப்போது, அங்கு வந்த 35 வயதுடைய பெண், லட்சுமியிடம் குடிக்க தண்ணீர் கேட்டு பேச்சு கொடுத்தார். பின்னர் லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த நகை அழகாக உள்ளது. அதை போன்று தனக்கும் நகை செய்ய அதை காண்பிக்குமாறு கூறியுள்ளார். அப்போது, லட்சுமி வேறு நகை உள்ளது என்று கூறி, வீட்டுக்குள் இருந்து ஒரு பையை எடுத்துவந்தார். அந்த பையில் இருந்த நகையை எடுத்து அந்த பெண்ணிடம் காண்பித்தார். சிறிது நேரத்தில் அந்த பெண், தனக்கு குங்குமம் வேண்டும் என்று கேட்டார். அதை எடுக்க சென்ற லட்சுமி, நகை பையை வெளியே வைத்துவிட்டு சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அந்த பெண் நகை பையுடன் மாயமாகி விட்டார். அதில் 8 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் மற்றும் வங்கி புத்தகம் ஆகியன இருந்தது. இதுகுறித்து லட்சுமி நல்லான் பிள்ளை பெற்றாள் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.


இளங்கலை பட்டப்படிப்புகளில் தமிழ் கட்டாயம்: உயர் கல்வித்துறை உத்தரவு


shashi tharoor : காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆகிறாரா சசிதரூர்? உள்கட்சித் தேர்தல் பரபரப்பு




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர