விழுப்புரம் : செஞ்சி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா அகலூர் கிராமத்தை சேர்ந்தவர் பாரதி மகன் ராமு என்கிற ராமமூர்த்தி (வயது 32). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி வீட்டில் இருந்து வந்தார். அந்த சமயத்தில் சென்னையில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் தங்கியிருந்து 6-ம் வகுப்பு படித்து வந்த 12 வயதுடைய மாணவி, கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி விடுமுறை விடப்பட்ட நிலையில் அகலூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்தார்.


கடந்த 25.9.2020 அன்று அந்த மாணவியை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு ராமமூர்த்தி அழைத்துச் சென்று செல்போனில் தவறான படங்களை காண்பித்து பாலியல் வன்கொடுமை செய்தார்.  இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமமூர்த்தியை கைது செய்தனர்.


இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில்  தீர்ப்பு கூறப்பட்டது. இதில் நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட ராமமூர்த்திக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்தும், மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடாக அரசு சார்பில் ரூ.7 லட்சம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராமமூர்த்தி, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.