காணாமல் போனதாக தேடப்பட்ட 19 வயது இளம்பெண் ஒருவர் வீட்டில் நிர்வாணமாக மீட்கப்பட்டார். ஆன்லைன் மூலம் சந்தித்த நபரால் இந்த கொடுமை அரங்கேறியுள்ளதுஅமெரிக்காவைச் சேர்ந்த 19 வயது மாணவியான மடைலின் திடீரென்று காணாமல் போனார். இது குறித்து குடும்பத்தினர் கொடுத்த புகாரின்படி போலீசார் விசாரணையில் இறங்கினர் கடைசியாக மடைலின் தங்குமிடம் ஒன்றின் சிசிடிவியில் தோன்றியுள்ளார்.  அன்று டிசம்பர் 13. அதன்பின்னர் மடைலினை காணவில்லை. ஆனால் மடைலின் செல்போனில் இருந்து டிசம்பர் 14ம் தேதி குடும்ப உறுப்பினர்களுக்கு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் ஐ லவ் யூ என்று எழுதப்பட்டிருந்தது. 





அதன்பின்னர் அந்த செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது. செல்போனை டவரை ஆராய்ந்த போலீசார் கடைசியாக அது உதா பகுதியை காட்டியுள்ளது.கிட்டத்தட்ட 500 பேரின் செல்போனை ஆய்வு செய்த போலீசார் சரியாக லொகேஷனை கண்டுபிடித்து ப்ரவுன் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அந்த வீட்டில் தான் மட்டுமே இருப்பதாக அந்த இளைஞர் கூறியுள்ளார். ஆனால் வீட்டின் அருகே மடைலினின் ஐடி கார்டு கண்டெடுக்கப்பட்டது. இதனை அடுத்து ப்ரவுனின் வீட்டை போலீசார் சோதனையிட்டனர். அதில் வீட்டில் அடித்தள பகுதியில் நிர்வாணமாக மடைலின் கிடந்துள்ளார். அது நிலக்கரி சேகரிக்கும் அறை. உடனடியாக மடைலினை மீட்ட போலீசார் ப்ரவுனிடம் விசாரணை நடத்தினர். 


ஆபாச ஆடியோவை காட்டி ப்ளாக்மெயில்.. 6 பேர் கைது.. இளைஞர் கொலை வழக்கில் 3 சிறுமிகளுக்கு தொடர்பு..!


விசாரணையின்படி, ப்ரவுனும், மடைலினும் சேட்டிங் செயலி ஒன்றில் நண்பர்களாகியுள்ளனர். இதனையடுத்து இருவரும் சந்தித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளனர். தன்னுடைய வீட்டுக்கு மடைலினை அழைத்த ப்ரவுன், அவரிடம் உடலுறவு கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். மடைலின் முடியாது என மறுக்கவே அவரை பல்வேறு விதங்களில் மிரட்டி கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டுள்ளார். மடைலின் செல்போனையும் பறித்துள்ளார். அதற்கு முன்பாகவே குடும்பத்தினருக்கு ஐ லவ் யூ என மடைலின் மெசேஜ் அனுப்பியுள்ளார். 
இதனையடுத்து ப்ரவுன் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவர் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை வழக்குகள் பாய்ந்துள்ளன. முகம் தெரியாத நபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று போலீசார் தொடர்ந்து எச்சரிக்கை கொடுத்து வரும் நிலையில் அறிமுகம் இல்லாதவர் வீட்டுக்கு மடைலின் தனியாக சென்றதே குற்றவாளிக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது என காவல்துறை குறிப்பிட்டுள்ளது. இது குறித்து மேற்கொண்டு காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண