உத்திரபிரதேச மாநிலத்தில் தற்கொலை செய்துக்கொண்ட மனைவி தூக்கிட முயற்சிப்பதை கணவன் வீடியோவாக எடுத்திருக்கும் சம்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர்கள் சஞ்சய் குப்தா மற்றும் ஷோபிதா குப்தா. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால் மனமுடைந்த ஷோபிதா, கழுத்தில் தாவணியுடன், படுக்கைக்கு மேல் உள்ள மின்விசிறியில்  தூக்கிலிட முயற்சித்திருக்கிறார். இதனை தடுக்காமல் கணவன் சஞ்சய் குப்தா வீடியோ எடுக்க துவங்குகிறார். அவர் தனது கழுத்தில் தூக்கை மாட்டிக்கொள்ளும் இறுதி நேரத்திலும் கூட சஞ்சய் மனைவியை தடுக்கவில்லை. அதற்கு பதில் வீடியோ எடுத்துக்கொண்டு “அருமை. இதுதான் உன் மனநிலை. உன்னோட மனநிலை ரொம்ப மோசமா இருக்கு “ என கூறுகிறார். பின்னர் அந்த பெண் தனது கழுத்தில் இருந்த தூக்கினை அகற்றிவிட்டு படுக்கை நிற்க , அத்துடன் வீடியோ முடிகிறது. 




இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில்  ஷோபிதா தற்கொலை செய்துக்கொண்டு இறந்துவிட்டதாக , அவரது வீட்டிற்கு மொபைல் மூலம் தொடர்புக்கொண்டு கூறியிருக்கிறார் சஞ்சய். மேலும் மகள் தற்கொலை செய்துக்கொண்டு பதறிப்போய் வந்தவர்களிடன் , சஞ்சய் தன்னை நிரூபிக்க முன்னதாக எடுத்த வீடியோவை காட்டியிருக்கிறார். ஷோபிதாவின் தந்தை ராஜ் கிஷோர் குப்தா கூறுகையில், "செவ்வாய்கிழமை மதியம் அவர் தற்கொலை செய்து கொண்டதாக மருமகனிடம் இருந்து அழைப்பு வந்தது. பதறிப்போய் அவளது அறைக்கு சென்றோம். அங்கு அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக சஞ்சய் CPR  சிகிச்சை கொடுத்துக்கொண்டிருந்தார். மேலும்  அவர் (சஞ்சய்) என் மகள் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறும் வீடியோவை எங்களிடம் காட்டினார்.அவரது நடத்தை மிகவும் கேள்விக்குரியதாக இருந்தது “ என்றார்.  ஷோபிதாவை படுக்கை அறையில் இருந்து மீட்ட அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் . அங்கு அவள் எப்போதோ உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்




மதியம் 12.30 மணியளவில் சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே தன் மகள் இறந்துவிட்டாள் . சஞ்சய் நினைத்திருந்தால் எங்களது பெண்ணை காப்பாற்றியிருக்கலாம் என பெண் வீட்டார் குற்றம் சாட்டுகின்றனர்.  இந்த சம்பவம் தொடர்பாக கான்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும்  உயிரிழந்த ஷோபிதாவின் கணவர் சஞ்சயை கைது செய்து , மனைவி மரணத்தில் சஞ்சயின் பங்கு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மனைவியின் தற்கொலை முயற்சியை தடுக்காமல் முதலில் வீடியோ எடுத்து தன்னை நிரூபிக்க முயற்சித்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.