திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆரணியை சேர்ந்த அம்ஜத் பாட்ஷா என்பவரின் அசைவ 7 ஸ்டார் ஓட்டல் இயங்கி வருகிறது. மேலும் நேற்று ஆரணி அருகே துந்தரீகம்பட்டு ஊராட்சிக்குபட்ட லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு பிரியதர்ஷினி, என்ற மனைவியும் ,லோசினி என்ற 10 வயது மகளும் சரண் 14 வயது மகன் ஆகியோர் நேற்று முன்தினம் ஆரணியில் உள்ள 7 ஸ்டார் ஓட்டலுக்கு சென்று தந்தூரி பிரியாணி சாப்பிட்டு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றனர். இதில் மேல்சிகிச்சைக்காக, வேலூர் தனியார் மருத்துவமனையில் ஆனந்த் சரண் பிரியதர்ஷினி ஆகியோர் அனுப்பி வைத்தனர். இதில் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 வயது பெண் குழந்தை லோசினி சிகிச்சை பலனின்றி இறந்தார்.



அதனையொடுத்து ஆரணி டவுன் பகுதியை சேர்ந்த ஜாகிர் வயது (30) ,பாத்திமா முகமது வயது (4) ,விஷ்ணு சீனிவாசன் ,யாகூப் திலகவதி, சரவணன் ,உள்ளிட்டோரும்   ஆரணி அருகே பையூர் ஊராட்சிக்குபட்ட எத்திராஜ் நகர் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் பாஸ்கரன் சந்தியா மற்றும் குழந்தை (4) செங்கம் தாலுக்கா காரப்பட்டு கிராமத்தை சேர்ந்த தமிழரசன் வயது (21) ,மோனிகா வயது (15), கார்த்திகா வயது (16) , லோகேஷ் வயது (15) உள்ளிட்ட 20 நபர்கள் ஆரணி அசைவ ஓட்டலில் தந்தூரி சிக்கன் பிரியாணி உள்ளிட்ட உணவுவை வாங்கி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையிலும் ஆரணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர்.


இந்நிலையில் ஆரணி கோட்டாச்சியர் கவிதா மற்றும் ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் ஆகியோர் ஆரணி அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அசைவ உணவக 7 ஸ்டார் ஒட்டலை ஆரணி கோட்டாட்சியர் கவிதா தலைமையில் அசைவ ஒட்டலை சீல் வைத்தனர்.   


மேலும் இது சம்பந்தமாக ஓட்டல் உரிமையாளர் அம்ஜத் பாஷா ஹோட்டல் மாஸ்டர் முனியாண்டி ஆகிய இருவரையும் ஆரணி நகர காவல் நிலைய போலீசார் அவர்களை கைது செய்து இருவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது வரை ஆரணி 7 ஸ்டார் ஒட்டல்லில் உணவு அருந்தி பாதிக்கப்பட்டவரின் ஐந்து வயது குழந்தையும் மற்றும் எட்டு வயது குழந்தையும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது. 



இது குறித்து காவல்துறையின் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுவது, ஆரணி டவுன் பகுதியிலுள்ள 7 ஸ்டார் அசைவ உணவகத்தில் உணவு அருந்திய 21 நபர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று லோசினி என்கின்ற 10 வயது சிறுமி உயிரிழந்தார்.


இதையடுத்து அந்த ஓட்டலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தற்பொழுது அந்த ஓட்டலின் உரிமையாளர் அம்ஜத் பாஷா அந்த ஹோட்டலில் பணிபுரியும் சமையல் மாஸ்டர் , முனியாண்டி ஆகியவர்கள் ஆரணி நகர காவல் நிலைய போலீஸார்  இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள்  இருவர் மீதும் பிரிவு  284 ( விற்பனை செய்யும் பொழுது உடல் உபாதைகள் ஏற்படுத்துதல்), 337 ( அஜாக்கிரதையாக இருந்தது), 304(A),( எதிர்பாராத விதமாக நடைபெறும் விபத்து) இந்த 3 பிரிவின் கீழ்  வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.