திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே உள்ள வெங்கடாஜலபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தனிஷ்லாஸ். இவரது மகன் நெப்போலியன். தனிஷ்லாசின் தம்பி ஆரோக்கியசாமி (வயது 69). இவருடைய மனைவி தனமேரி (63). இவர்களின் மகன் சசிக்குமார் (41). தனிஷ்லாஸ், ஆரோக்கியசாமி வீடுகள் அருகருகே உள்ளன. இவர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் ஊரில் உள்ளன. இதுதொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 9-4-2014 அன்று காலை 9 மணி அளவில் தனிஷ்லாசுக்கும், அவருடைய தம்பி ஆரோக்கியசாமிக்கும் இடையே சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆரோக்கிய சாமி சத்தம் போட்டுவிட்டு சென்றுவிட்டார்.
தந்தை, மகன் குத்திக்கொலை
பின்னர் அன்று இரவு 7 மணி அளவில் ஆரோக்கியசாமி, தனமேரி, சசிக்குமார் ஆகியோர் வீட்டின் முன் நின்று கொண்டு தனிஷ்லாஸ் குடும்பத்தினரை திட்டியுள்ளனர். இதை கேட்கச்சென்ற தனிஷ்லாசை சசிக்குமார் குத்து கோலால் நெஞ்சில் குத்தியுள்ளார். இதைப்பார்த்து நெப்போலியன் தடுக்க சென்ற போது, அவரையும் சசிக்குமார் குத்தினார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு ஆரோக்கியசாமியும், தனமேரியும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த இரட்டை கொலை குறித்து கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமார், ஆரோக்கியசாமி, தனமேரி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதில், குற்றம்சாட்டப்பட்ட தனிஷ்லாசின் தம்பி மகன் சசிக்குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும், தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி தீர்ப்பு அளித்தார். மேலும் அவருடைய தம்பி ஆரோக்கியசாமிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், ஆரோக்கிய சாமியின் மனைவி தனமேரிக்கு ஒராண்டு சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதுபோன்ற குற்றசம்பவங்களில் ஈடுபடுவோர்கள் மீது விரைந்து விசாரனை நடத்தி தண்டனை வழங்க காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்