வண்டலூர் அடுத்த  ஓட்டேரியில் மருந்து கடை உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யாப்ட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ரவுடி மீது சந்தேக அடிப்படையில் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்

 

சென்னை ( Chennai News ) : சென்னை மண்ணிவாக்கம் ராசாத்தி கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த வினோத்குமார் வயது 44  இவரது மனைவி கஸ்தூரி,  இவர்களுக்கு ஜீவனா என்ற 17 வயது மகளும், ரோஷன் 14 வயது மகனும் உள்ளனர். வினோத்குமார் ஓட்டேரியிலுள்ள ஐந்தாவது பிரதான சாலையில் மருந்து கடை  நடத்தி வருகிறார்.



 

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு அருகில் உள்ள பேக்கரி கடைக்கு சென்று உணவுப்பொருட்கள்  வாங்கி கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் வினோத் குமாரை தலையில் சரமாரியாக  வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதனால் ரத்த வெள்ளத்தில் வினோத் குமார் உயிரழந்தார் தகவல் அறிந்து வந்தால் ஓட்டேரி போலீசார் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,



ஏற்கனவே அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சிலம்பு என்கிற சிலம்பரசன் மாமூல் கேட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொலைபேசி மூலம் மிரட்டியாக வினோத்குமார் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் கைது செய்யபட்டார். பின்பு வெளியே வந்த சிலம்பரசன் கார் திருட்டில் ஈடுபட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கடலூர் சிறையில் அடைக்கபட்டுள்ளார்.மேலும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சிலம்பரசன் ஆதரவாளர்கள் சிலர் வினோத்குமாரிடம் அளித்த புகாரை திருப்பி பெற வேண்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூற்படும் நிலையில் சந்தேக அடிப்படையில் சிலம்பரசனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




இந்தநிலையில் வியாபார சங்கத்தினர்  மற்றும் பொதுமக்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குவிந்தனர்.  சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது   செய்யவில்லை என்றால் உடலை வாங்க மறுத்து  அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  வியாபார   சங்கத்தின் உறுப்பினர் செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பாக  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




  மற்றொரு பிரிவினர் செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனை முன்பாக திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியது.  குறிப்பாக காவல்துறையினருக்கு  புகார் அளித்த  நபருக்கு ரவுடிகளிடமிருந்து பாதுகாப்பு தரவில்லை என்றால்  எப்படி தாங்கள்  தொழில் செய்வது என வியாபாரிகள்  கண்டன கோஷங்கள் எழுப்பினர்.  காவல் துறையினரின் அலட்சியத்தாலு, இந்த படுகொலை நடந்திருப்பதாக அவர்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.  காவல்துறையினர் தொடர்ந்து வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்காமல் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாகவும் அவர்கள் குற்றச்சாட்டை தெரிவித்தனர்.