திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபும் அருகேயுள்ள இனாம்காரியந்தல் கிராம பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் என்பவரது மகன் பிரபாகரன் வயது (27). இவர் தற்போது தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். இதற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பகுதியில் பிரபாகரன் அடிக்கடி அந்த பகுதியில் வருவது வழக்கம்.  திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அருகேயுள்ள மாதலம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் துணை நடிகை சத்யா வயது(22). இவர் சென்னையில் தங்கி சீரியல் மற்றும் திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார் . இவர் நடித்த படங்கள் மற்றும் சீரியல்கள் இன்னும் வெளிவரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், சீரியல் துணை நடிகை கடந்த 4 மாதங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் உள்ளதால் சத்யா திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்துள்ளார்.


அப்போது வீட்டிற்கு எப்படி செல்வது என்று தெரியாமல் இருந்துள்ளார் இந்நிலையில் ஆம்புலன்ஸ் டிரைவர் பிரபாகரன் அவரிடம் சென்று நான் அந்த பகுதிக்கு தான் செல்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் துணை நடிகை ஆம்புலன்ஸில் சென்றுள்ளார். அப்போது பிரபாகரன் துணை நடிகையிடம் தொலைபேசி எண் வாங்கியுள்ளார். இந்நிலையில் இருவரும் தொலைபேசியில் பேசி வந்துள்ளனர் , இதனிடையே பிரபாகரனுடன், சத்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.  பின்னர், நண்பர்களாக இருந்த இருவர்களுக்கு இடையில் அது காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். இதனையடுத்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு பிரபாகரனிடம் சத்யா கேட்டுள்ளார்.


 




 


ஆனால், அதற்கு பிரபாகரன் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளாராம். ஒரு கட்டத்திற்கு மேல் சத்யாவை பிரபாகரன் நிராகரிக்க ஆரம்பித்துள்ளார். இதனால், பிரபாகரன் மீது இருந்த நம்பிக்கை சத்யாவிற்கு குறைய ஆரம்பித்தது. தன்னை அவர் ஏமாற்றுகிறார் என்பதை சத்யா உணர்ந்தார். பின்னர் சத்யா விசாரித்த பிறகு அவருக்கு வேறு ஒரு பெண்ணிடம் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார் என்பது தெரியவந்தது  


இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்து பிரபாகரன் ஏமாற்றி விட்டார் என்று திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் துணைநடிகை சத்யா புகார்அளித்தார். இதனைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் டிரைவர் பிரபாகனை காவல்நிலையத்தில் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நாங்கள் பழகி வந்தது உன்மைதான் எனக்கூறியுள்ளார் அதன் பின்னர்  ஆம்புலன்ஸ் டிரைவர் பிரபாகரன் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர், வன்கொடுமை வழக்கில் கைது செய்தனர். துணை நடிகையை ஆம்புலன்ஸ் டிரைவர் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதும், அவருடன் காதலாகி பாலியல் வன்கொடுமை செய்ததும் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர் குற்றங்களின் பின்னணியில் பெண்கள் எளிதாக ஏமாற்றப்படுகிறார்கள். எனவே கவனமாக அவர்கள் ஒவ்வொரு விசயத்தையும்  கையாள வேண்டும். அதன் மூலம் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.