திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரபகுதி கோவிந்தன் தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தனன் வயது (28) . இவர், சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கவுசல்யா வயது (23) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்கள் சேர்ந்து திருமண செய்துவைத்தனர். இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் கிருத்திகா என்கிற மகள் உள்ளார். குழந்தை பிறந்ததை அடுத்து கணவன்-மனைவிக்கும்  இடையே குடும்ப பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு கணவன் மனைவி இருவருமே பேசி சமாதானம் அடைந்துள்ளனர். அதனைத்தொடர்ந்து மீண்டும் ஜனார்த்தனனுக்கும் கவுசல்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு கைகலப்பாக மாறியது தன்னுடைய மனைவி கவுசல்யாவை அடித்தாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கவுசல்யா நடந்த சம்பவம் குறித்து தன்னுடைய தாயாரிடம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


அதனை அறிந்த கவுசல்யாவின் தாயார் ராஜேஸ்வரி கவுசல்யா வீட்டிற்கு வந்து ஜனார்த்தனுடனிடம் பேசி சமாதானம் செய்து வைத்துவிட்டு வந்துள்ளார். மீண்டும் சம்பவத்தன்று இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் மனம் உடைந்த கவுசல்யா தனது குழந்தை கிருத்திகாவை தாயிடம் கொடுத்துவிட்டு குளிக்க செல்வதாக கூறிவிட்டு வீட்டினுள் சென்று கதவினை பூட்டிக்கொண்டுள்ளார். கவுசல்யா வெகு நேரம் ஆகியும் கதவினை திறக்காததால் ராஜேஸ்வரி சந்தேகம் அடைந்து கதவினை தட்டியுள்ளார். ஆனால், கதவினை கவுசல்யா திறக்காததால் அக்கம்பக்கத்தில் உள்ள உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் , உறவினர்கள் கதவினை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது கவுசல்யா தன்னுடைய சேலையில் தூக்குப்போட்டு கொண்டுள்ளதை பார்த்து உறவினர்கள் மற்றும் கவுசல்யாவின் தாயார் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்தவர்கள் உடனடியாக கவுசல்யாவை மீட்டு செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு  மருத்துவர்கள் கவுசல்யாவை  பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


 


 




 


அதன் பிறகு கவுசல்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்கா அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் அடிப்படையில் செய்யாறு சரக துணை காவல் கண்காணிப்பாளர்  வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து பிரேத விசாரணை நடத்தினார். திருமணம் ஆகி இரண்டே ஆண்டுகளில் கவுசல்யா தற்கொலை செய்து கொண்டதால் அது குறித்து செய்யாறு உதவி ஆட்சியர் அனாமிகா மேல் விசாரணை மேற்கொண்டு வருகிறார். திருமணம் ஆகி இரண்டே வருடத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம். சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060