விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட ரஹ்மத்நகர் மரைக்காயர் தோப்பு பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 8-ந் தேதியன்று மரக்காணம் நொச்சிக்குப்பத்தை சேர்ந்த கலைமணி மகன் அபினேஷ் (வயது 22) என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் புதுச்சேரி மாநிலம் உருளையன் பேட்டை பாளைவாசல் தெருவை சேர்ந்த பஷீர்முகம்மது மகன் அகமது அசேன் (22), வானூர் தாலுகா சின்ன கோட்டக்குப்பம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ராயர் மகன் அப்பு என்கிற ஜவகர் (21),


Ponmudi Speech : ”இந்தி படிச்சா.. கோயம்பத்தூரில் பானி பூரி தான் விற்கலாம்” அமைச்சர் பொன்முடி!


கூட்டம் கூட்டமாய் வரும் வெளிமாநில கொள்ளையர்கள்... கட்டி வைத்த மக்கள்... விருத்தாசலத்தில் பீதி!


புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த கார்த்திக் மகன் தேசமுத்து என்கிற சதீஷ் (20) ஆகிய 3 பேரையும் கோட்டக்குப்பம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் 3 பேரும் இது போன்று ரவுடியிச செயல்களில் ஈடுபட்டு வருவதோடு இவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் என பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து இவர்கள் 3 பேரின் இத்தகைய செயல்களை தடுக்கும் பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார்.


Karur Mayor Kavitha Inspection | ”இது மார்க்கெட்டா? பஸ் ஸ்டாண்டா?” அதிகாரிகளை வெளுத்து வாங்கிய மேயர்


அதன் பேரில் அகமது அசேன், அப்பு, தேசமுத்து ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி காவல் கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டார். இதையடுத்து அகமதுஅசேன், அப்பு, தேசமுத்து ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கோட்டக்குப்பம் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவர்களுக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.


 மேலும் படிக்க : Watch Video : பார்வை கற்பூர தீபமா..! நாதஸ்வரத்திலே வாசித்து அசத்திய கிராமிய கலைஞர்..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண