திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்செங்கம் அருகே உள்ள துரிஞ்சாபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (35) கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரேமா (30) என்ற பெண்ணுடன் இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில் இந்த தம்பதிக்கு 2  வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் விஜயகுமார் மற்றும் பிரேமா இவர்கள்  இருவரும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தாக கூறப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவனை விட்டு பிரிந்து பிரேமா தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜயகுமார் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என மனைவியை நேரில் சந்தித்து வீட்டுக்கு அழைத்தாக கூறப்படுகிறது.



அதனைத்தொடர்ந்து, கடந்த 17 ஆம் தேதி  வீட்டை விட்டு வெளியே சென்ற  விஜயகுமார் இரவு வீட்டிற்கு  வராததால் விஜயகுமாரின் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் மேல்செங்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.  அதனைத்தொடர்ந்து கருமாங்குளம் ஏரிக்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இந்த  தகவல் மேல்செங்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விஜயகுமாரின் இந்த மரணத்தில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் புகார் அளித்தனர்.



இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் தலைமையில் விசாரணையை தொடங்கினர் அதில் விஜயகுமாரின் மனைவி மீது சந்தேகம் ஏற்றப்பட்டது. அதன் பின் போலிசார் பிரேமாவிடம் மேற்கொண்ட விசாரணையில் பரமனந்தல் அடுத்த அம்பேத்கர் நகரில் வசிக்கும் எலக்ட்ரீசியன் ஆறுமுகம் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. 


அதன் அடிப்படையில் காவல்துறையினர் ஆறுமுகத்திடம் விசாரணை நடத்தியதில், என் கள்ளக்காதலி பிரேமாவை, விஜயகுமார் தொடர்ந்து சேர்ந்து வாழ அழைத்து தொல்லை செய்ததாகவும், இதனால் ஆத்திரம் அடைந்து பிரேமா என்னிடம் விஜயகுமாரை கொலை செய்ய சொன்னார். அதன்பேரில் விஜயகுமரை கருமாங்குளம் ஏரிக்கரையில் வைத்து கொலை செய்ததாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.



இதையடுத்து காவல்துறையினர் பிரேமா மற்றம் அவரது கள்ளக்காதலன் ஆறுமுகம் ஆகிய இருவரையும் கைது செய்த மேல்செங்கம் காவல்துறையினர் இருவரையும் வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். கணவனையே கள்ளக்காதலனை வைத்து மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதல் மோகத்தால் கணவனை கொல்ல காரணாக இருந்த மனைவி சிறைக்கு சென்ற நிலையில், ஆதரவின்றி தவிக்கும் இரண்டரை வயது பெண் குழந்தையின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.