தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே பல்லவராயன்பட்டி கிராமத்தை சேர்ந்த முனிஸ்வரீ (27) என்ற பெண் திருமணம் முடித்து கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், முனீஸ்வரி போடி அருகே தனியார் தொண்டு நிறுவன குழந்தைகள் இல்ல காப்பகத்தில் பணியாற்றி வந்துள்ளார். அங்கு ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் இல்ல காப்பகத்தில் தங்கி பயின்று வந்துள்ளார்.




இதையடுத்து இங்கு பணிபுரியும் முனீஸ்வரி தொடர்ந்து இரவு நேரத்தில் 9 வயது பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிய வந்தது. ஒரு கட்டத்தில் இச்சிறுவன் அந்த இல்ல காப்பகத்தில் இருந்து போடி சில்லமரத்துபட்டி பகுதியில் உள்ள தனியார் தொண்டு நிறுவன காப்பகத்திற்கு மாற்றப்பட்டார்.


ICC T20 Rankings: நம்பர் ஒன்றில் ராஜாவாக இந்திய அணி.. பின்னடைவை சந்தித்த ரோஹித், கோலி.. வெளியான தரவரிசை!


அதன் பின்பு அந்த சிறுவன் மன ரீதியாக பாதிக்கப்பட்டு உடல்நிலை சோர்வாகவே இருந்துள்ளார். இதை புதிதாக சேர்ந்த இல்ல காப்பகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் விசாரித்ததில், அந்த சிறுவன் தனக்கு முனீஸ்வரி என்ற பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக கூறியதாக தெரிகிறது.




The GOAT: விஜய்யின் தி கோட் பட தொலைக்காட்சி உரிமையை தட்டித்தூக்கிய பிரபல சேனல்.. இத்தனை கோடிகளா!


இதையடுத்து இந்த பிரச்சனை தேனி குழந்தைகள் நல அலுவலர் விஜயலட்சுமிக்கு தெரிய வர அவர்கொடுத்த புகாரின் பேரில், போடி அனைத்து மகளிர் காவல்துறையினர் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முனீஸ்வரி(27) என்ற பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


போக்சோ சட்டம்


இந்தியாவில் குழந்தைகள் பாதுகாக்கும் கொள்கைகளின் ஓரு பகுதியாக உருவாக்கப்பட்டது தான் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 (The protection of children from sexual offense(pocso) Act 2012). இந்த சட்டம் சுருக்கமாக போக்சோ சட்டம் என அழைக்கப்படுகிறது, மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10 தேதியும், மக்களவையில் மே மாதம் 22 தேதியும் நிறைவேற்றப்பட்டது, நவம்பர் 14-ஆம் தேதி அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு வரை குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடைபெறும் பொழுது ஐபிசி சட்டம் பிரிவு 375 கற்பழிப்பு, பிரிவு 354 பெண்ணின் அடக்கத்தை மீறுதல், பிரிவு 377 இயற்கைக்கு மாறான குற்றங்கள் எனும் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.


போக்சோ சட்டத்தின் பொது அம்சங்கள்:


18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்,வன்முறை, பாலியல் துன்புறுத்தல், சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது. இசட்டத்தில் கீழ் 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடியவேண்டும்.  இசட்டத்தில் குற்றம் புரிந்த குற்றவாளிகளுக்கு சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங்காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம், சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு. உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக் குரியவர்கள். அவர்களே குற்றம் இழைக்கும் போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது.


மாவட்ட அளவில் குழந்தை பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். தனி காவல்துறை பிரிவும் ஏற்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை எங்கு இருந்தால், அக்குழந்தையின் நலனுக்கு உகந்தது என்று பார்க்க வேண்டும். சில சமயம், குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்பவராக இருந்தால், அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.