கோவை அருகே திருமணத்தை தாண்டிய உறவில் இருந்த  மனைவியை கண்டித்தும் கேட்காததால், ஆத்திரத்தில் சமையல் கத்தியை கொண்டு உடல் முழுவதும் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பள்ளபாளையம் பகுதியில் வசித்து வருபவர் கணேசன். இவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நிவேதா (24). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு 2  குழந்தைகள் உள்ள நிலையில் நிவேதாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கணேசனுக்கு தெரியவர, நிவேதாவை கண்டித்ததாக தெரிகிறது. கணவர் பலமுறை கண்டித்தும் கேட்காமல் நிவேதா தொடர்ந்து முருகனுடன் பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை பணி முடித்து கணேசன் வீடு திரும்பிய போது, நிவேதாவுடன் முருகன் தனிமையில் இருந்ததாகவும், கணேசனைப் பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது. 


இதனால் ஆத்திரமடைந்த கணேசன், நிவேதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியைக் கொண்டு கணேசன் தனது காதல் மனைவியை உடல் முழுவதும் சரமாரியாக குத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றார். அலறல் சத்தம் கேட்டு தக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது நிவேதா உடல் முழுவதும் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் காவல் துறையினர், நிவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர், தப்பியோடிய நிவேதாவின் கணவர் கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் கடந்த உறவால் காதல் மனைவியை கணவன் வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண