தாம்பரம் அருகே சைவ உணவக்கத்திற்க்கு சென்று அசை உணவு கேட்டு கைகலப்பில் ஈடுபட்ட ஊர்காவல் படையினர் குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த பதுவஞ்சேரியில் உள்ள அர்ச்சனா  பவன் உணவகத்தில் நேற்று இரவு தாம்பரம் ஊர்காவல் படையை சேர்ந்த இரண்டு பேர் சாப்பிடுவதற்காக மது போதையில் சென்றதாக கூறப்படுகிறது

 

சைவ உணவகத்தில் தங்களுக்கு சிக்கன் பிரைட் ரைஸ் வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதற்க்கு அங்கிருந்த ஊழியர்கள் இது சைவ உணவகம் இங்கு அசைவம் கிடையாது என்று கூறியுள்ளனர். இருந்தாலும் தங்களுக்கு பிரைட் ரைஸ் வேண்டும் என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடை ஊழியர்கள் இருவரையும் தொடர்ந்து இருவரை சமாதானம் செய்ய, பல்வேறு முயற்சிகள் எடுத்தும் தொடர்ந்து அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

 

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஊர்காவல் படை போலீசாருக்கும் கடை ஊழியர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதில் இருதரப்பினரும் சரமாரியாக தாக்கி கொண்டுள்ளனர். சம்பவம் குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏறடுத்தியுள்ளது. மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரிடமும் சேலையூர் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண