உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த முறை 15 வயது சிறுவன் ஒருவனை 35 வயது பெண் ஒருவர் ஆசை காட்டி உடலுறவு வைத்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 


பிரிட்டனின் கிழக்கு சசெக்ஸ் பகுதியில் கரோல் டெய்லர் என்ற 35 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 15 வயது சிறுவன ஒருவன் அறிமுகமாகியுள்ளதாக தெரிகிறது. அவரிடம் இன்ஸ்டாகிராமில் இந்தப் பெண் பேசியுள்ளார். தினமும் அதிக நேரம் பேசி அவருக்கு ஆசை காட்டியுள்ளதாக தெரிகிறது. அதன்பின்னர் அந்த சிறுவனை இவர் நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளார். 




அப்போது அந்த சிறுவனுடன் இவர் உடலுறவு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்று அவர் தொடர்ந்து இரண்டு முறை அந்த சிறுவனை ஆசை காண்பித்து உடலுறவுக்கு இணங்க வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்பின்னர் அவர் மீண்டும் அச்சிறுவனை தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். இதன்காரணமாக அச்சிறுவன் பெற்றோர்களிடம் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 


 


அதன்பின்னர் காவல்துறையினர் அந்தப் பெண்ணை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியன. அதன்படி அந்தப் பெண் தினமும் சுமார் 100 இன்ஸ்டாகிராம் குறுஞ்செய்தி அனுப்பி அந்த சிறுவனை தன்னுடைய ஆசைக்கு இணங்க வைத்துள்ளார். அத்துடன் தொடர்ந்து அந்தச் சிறுவனுக்கு ஆபாசமாகவும் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதும் தெரியவந்துள்ளது. 


 


இதன்பின்னர் அந்தப் பெண் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த வழக்கில் நேற்று முன்தினம் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் சிறுவனை ஆசை காட்டி உடலுறவு வைத்து கொண்ட குற்றத்திற்காக இந்த பெண்ணிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்தப் பெண்ணின் பெயரை பாலியல் குற்றம் செய்த நபர்களுக்கான பதிவேட்டிலும் எழுத நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் உண்மையாகவும், தைரியமாகவும் அனைத்து ஆதாரங்களையும் கொடுத்த அந்த சிறுவனை நீதிபதிகள் பாராட்டினர். இந்த விஷயங்களை மறந்துவிட்டு எதிர்க்காலம் தொடர்பாக சிந்தித்து நல்ல வழியில் வளர வேண்டும் என்ற அறிவுரையையும் நீதிபதிகள் அச்சிறுவனுக்கு வழங்கினர். 15 வயது சிறுவனை 35 வயது பெண் ஆசை காட்டி உடலுறவு வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க: ‛நான் தனி ஆளு இல்ல...’ என வலம் வந்த ஹரி நாடார்... மீண்டும் மீண்டும் கைதான கதை!