சென்னை கிண்டி அடுத்த ஆதம்பாக்கம் ராஜா மூன்றாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (23) இவர் ஓய்வு பெற்ற காவலரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அதே பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து,வரும் பெண் தலைமை காவலரின் மகள் சத்தியா (20), தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
  

 

ஒரு தலைக்காதல் என்னும் பெயரில், பெண்ணை தொடர்ச்சியாக தொல்லை செய்து வந்த நிலையில், பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சதீஷ், சத்தியாவை தண்டவாளத்தில் தள்ளிவிட்டுள்ளார். இதில் ரயிலில், சிக்கி சத்தியா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதை பார்த்த பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பகுதி மக்கள் உடனடியாக சதீஷை மடக்கி பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் சதீஷ் அங்கிருந்து பொதுமக்களை மிரட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.



 

இது குறித்து தகவல் அறிந்து சம்பவத்திற்கு வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இவர்கள் இருவரும் பள்ளி காலத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். சம்பவம் நடந்த பொழுது சத்தியாவின் தோழி உடன் இருந்துள்ளார்.அவரிடம் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதுகுறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, சதீஷ் மற்றும் சந்தியா ஆகிய இருவரும் சம்பவம் நடைபெற்றபொழுது, இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரியவந்துள்ளது. திட்டமிட்ட கொலை என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் தற்போது வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சதிஷ் என்பவரை தேடி வருகிறோம் என தெரிவித்தனர். இதுகுறித்து இரண்டு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.