புதுச்சேரி: இளம்பெண்ணின் அந்தரங்க வீடியோவை, சமூக வலைதளத்தில் வெளியிட்ட காதலன், அவரது தோழி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
இளம்பெண்ணின் அந்தரங்க வீடியோ சிக்கிய காதலன்
புதுச்சேரியை சேர்ந்த பெண் ஒருவருடைய அந்தரங்க வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்தனர். அதில், அந்தரங்க வீடியோவை எடுத்தவர் அப்பெண்ணின் காதலன் புதுச்சேரியை சேர்ந்த அபிமன்யு, 32. என்பது தெரியவந்தது. அபிமன்யுவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அப்பெண்ணிடம் வீடியோ காலில் பேசும்போது, அந்த பெண் பேசிய வீடியோ காலை பெண்ணிற்கு தெரியாமல் ரெக்கார்ட் செய்து, அபிமன்யூ வைத்திருந்துள்ளார்.
பெண்ணின் அந்தரங்க படத்தை நீக்கும் முயற்சி
இதற்கிடையே, அபிமன்யுவின் தோழியான மற்றொரு பெண், அந்த வீடியோவை தனது மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து, சமூக வலைதளம் மற்றும் பெண்ணின் வீட்டில் உள்ளவர்களுக்கு அனுப்பியது தெரியவந்தது. அதையடுத்து, அபிமன்யு மற்றும் அவரது தோழியை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில், ஆஜர்ப்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.
இன்ஸ்ட்ராகிராம், வாட்ஸ் ஆப் மூலம் மற்றவர்களுக்கு அனுப்பிய அந்த பெண்ணின் அந்தரங்க படத்தை நீக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வீடியோவை மேலும் பலர், சமூக வலை தளங்களில் பகிர்ந்துள்ளதால், அவர்களையும் கைது செய்ய சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
விழிப்புணர்வு வேண்டும்... சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தல்
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், இன்ஸ்ட்ராகிராம், வாட்ஸ் ஆப் மூலம் மற்றவர்களுடன் வீடியோ வழியாக பேசும் பொது கவனமாக இருக்கவேண்டும், குறிப்பாக வீடியோ கால் வழியாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. புகைப்படங்களை பகிரவேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
தங்களுடைய இன்ஸ்டாகிராம் வாட்ஸ் அப் பேஸ்புக் போன்றவற்றை செக்யூரிட்டி ஆப்ஷன் என்னென்ன பாதுகாப்பு நடைமுறைகள் இருக்கின்றதோ அனைத்தையும் பின்பற்றுமாறும் அப்படி பின்பற்றாவிடில் உங்களுடைய புகைப்படங்களை எளிதில் மற்றவர்கள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது என்றும், இது போன்று தங்களுடைய புகைப்படங்களை எடுத்து மர்ம நபர்கள் தவறான வழியில் பயன்படுத்தப்படும் ஆகவே எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்