பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று தான் வருகின்றன. அந்தவகையில் தற்போது மேலும் ஒரு குற்றச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் வீட்டிற்கு விருந்தாளியாக வந்த நபர் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் டேனியல் ஸ்மித்(31). இவர் கடந்த வருடம் ஜனவரி மாதம் ஒரு தம்பதியின் வீட்டிற்கு விருந்தாளியாக சென்றுள்ளார். அப்போது இவரை அந்தத் தம்பதி அங்கு தங்க வைத்துள்ளதாக தெரிகிறது. அந்த சமயத்தில் இரவு நேரத்தில் டேனியில் ஸ்மித் அத்தம்பதியின் படுக்கை அறையில் நுழைந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் அங்கு கணவருடன் படுக்கையில் தூங்கி கொண்டிருந்த அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. 


அந்த சமயத்தில் தூக்கத்தில் இருந்து எழுந்த அப்பெண் மற்றும் அவருடைய கணவர் ஆகிய இருவரும் ஸ்மிதை அடித்து வெளியே அனுப்பி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் ஸ்மிதை கைது செய்துள்ளனர். அதன்பின்னர் அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் தொடர்ந்து தன்னுடைய குற்றத்தை மறுத்து வந்துள்ளார். 




இந்தச் சூழலில் கடந்த ஒராண்டாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டேனியல் ஸ்மித்திற்கு நீதிமன்றம் 6 ஆண்டுகாலம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. மேலும் டேனியல் ஸ்மித் பெயரை பாலியல் குற்றங்கள் செய்யும் நபர்களின் பட்டியலில் இணைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கில் நீதிபதிகள், ”குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் தன்னுடைய குற்றத்தை மறுத்தாலும் அவர் செய்த விஷயங்கள் சாட்சிகளின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த நபருக்கு தனியாக அறை ஒதுக்கப்பட்ட பிறகும் இரவு நேரத்தில் அவர் தம்பதிகளின் படுக்கை அறைக்கு எதற்காக சென்றார் என்பதை தெளிவாக கூறவில்லை. மேலும் அவருடைய செயல் அந்தப் பெண்ணை மனதளவில் மிகவும் பாதித்துள்ளது. ஆகவே இவருடைய குற்றத்திற்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர். 


குற்றம்சாட்டப்பட்ட நபர் ஏற்கெனவே குடும்ப வன்முறை வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டவர் என்பதும் இந்த வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது. வீட்டிற்கு விருந்தாளியாக வந்த நபர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண