லிங்குசாமி இயக்கத்தில் தமிழில் வெளியான ‘ஆனந்தம்’ திரைப்படத்தின் கிட்டத்தட்ட தழுவல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கில் இடம்பிடித்துவரும் முக்கியமான சீரியல்களிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அண்ணன்- தம்பி பாசத்தையும், குடும்ப ஒற்றுமையையும் மையமாக வைத்து ஒளிப்பரப்பாகிவரும் இச்சீரியலைக் காண்பதற்கே ரசிகர்கள் பட்டாளம் அதிகளவில் உள்ளது. 


தொடர்ந்து, டிஆர்பியில் முன்னேற்றம் பெறுவதற்காக தனத்திற்கு குழந்தைப்பிறப்பது போன்றும், கடைசி தம்பி கண்ணன் காதல் என கதைக்களம் நகர்ந்தது. இதற்கிடையில் தான்  மீனாவின் அப்பாவான ஜனார்த்தனன் எப்படியாவது குடும்பத்தைப்பிரித்து மீனாவை தன்னுடனே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு இருந்தார். ஆனால் யார் என்ன செய்தாலும் பரவாயில்லை. அண்ணன்- தம்பி பிரியவே மாட்டோம் என்ற மனநிலையில் இருந்தனர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்.


இந்தநிலையில், விஜய் டிவியில் தமிழில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் போன்றே பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்று தெலுங்கில் வதியம்மா என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. 






தற்போது தெலுங்கில் இந்த தொடர் முடிவுக்கு வந்துள்ளதாக புகைப்படங்கள் வெளியாகி செய்திகள் பரவி வருகின்றது. இதைதொடர்ந்து, இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்கள் வருத்தத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்தநிலையில், தெலுங்கை போன்று தமிழிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிவடைய போவதாக தெரிகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண