பல மோசடிகளை செய்து, IAS தேர்வில் வெற்றி பெற்ற  பூஜா கேத்கரின் பணி ஆணையை ரத்து செய்ய நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் எதிர்காலத்தில் தேர்வு எழுத முடியாதபடியான நடவடிக்கையையும் எடுத்துள்ளது. 


சர்ச்சையில் சிக்கிய பயிற்சி IAS அதிகாரி:


 ஐஏஎஸ்  தேர்வில் வெற்றி பெற்று , மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பயிற்சி பெற்று வரும் பூஜா கேத்கருக்கு எதிராக மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்கியதை தொடர்ந்து, அவருக்கு சிக்கல் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. 


கேத்கர் தனது தனிப்பட்ட ஆடி காரில் சைரனைப் பயன்படுத்தியது, பயிற்சி அதிகாரிகளுக்குக் கிடைக்காத தனி வீடு மற்றும் கார்  உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கோரிக்கைகளை எழுப்பியது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளானது இவர் மீது எழுந்தது.








பூஜா கேத்கர் சர்ச்சை தொடர்பாக யுபிஎஸ்சி வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கை வெளியிட்டது. சர்ச்சைக்குரிய அதிகாரிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) தாக்கல் செய்துள்ளதாகவும், சிவில் சர்வீசஸ் தேர்வு-2022 இலிருந்து அவரது ஆணை ரத்து செய்வதற்கான காரண நோட்டீஸும் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும்,  கேத்கர் எதிர்காலத் தேர்வுகளில் கலந்து கொள்ள முடியாதபடியும் தடை செய்யப்படுவதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.