வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த சிறுவன் தலையில் தாக்கிய தோட்டா: CISF துப்பாக்கி பயிற்சியில் விபரீதம்!

இரண்டு குண்டுகள் அவ்வாறு வந்த நிலையில், ஒரு குண்டு புகழேந்தி உணவருந்திக் கொண்டிருந்த வீட்டிற்குள் பாய்ந்தது. 

Continues below advertisement

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரம் ஊராட்சியில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மத்திய தொழிற் பாதுகாப்பு படை( CISF) வீரர்கள் அடிக்கடி பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அந்த மையத்திற்கு அருகில் சில குடியிருப்புகள் இருப்பதாக  கூறப்படுகிறது. 

Continues below advertisement



இந்நிலையில் இன்று வழக்கம் போல அந்த பகுதியில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கொத்தமங்கலப்பட்டி கலைச்செல்வன் என்பவரது மகன் புகழேந்தி(11) என்பவர், அப்பகுதியில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு காலை உணவு அருந்த வந்துள்ளார். வீட்டிற்கு வந்த பேரனுக்கு அவனது தாத்தா, உணவு அளித்த நிலையில், சிறுவன் வீட்டில் அமர்ந்து உணவு உட்கொண்டிருந்துள்ளார். அப்போது, பயிற்சியில் இருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் சுட்ட துப்பாக்கி குண்டு, குடியிருப்பு பகுதியில் நுழைந்ததாக கூறப்படுகிறது. இரண்டு குண்டுகள் அவ்வாறு வந்த நிலையில், ஒரு குண்டு புகழேந்தி உணவருந்திக் கொண்டிருந்த வீட்டிற்குள் பாய்ந்தது. 


அதில் புகழேந்தியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தவெள்ளத்தில் அவர் சுருண்டு விழுந்தார். மற்றொரு குண்டு, வீடு ஒன்றின் உளளே நுழைந்தது. அதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை உடனே தூக்கிக் கொண்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தலைமையில் பலத்த காயம் இருப்பதால், சிறுவனுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்ததுடன், சம்பவம் நடந்த இடத்தில் நேரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

இந்நிலையில் காயம்பட்ட சிறுவனின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், அவரை தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அனுப்ப உள்ளனர். புதுக்கோட்டை மருத்துவ கல்லூரியில், சிகிச்சை அளிப்பதற்கு போதிய மருத்துவ குழுவினர் இல்லாததால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. 

சிறுவனின் தலையில் இடது புறம் பாய்ந்த குண்டு, மூளையின் ஓரம் சிக்கியிருப்பதாகவும், இதனால் சிறுவனின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் முதலுதவி அளித்த  மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Continues below advertisement
Sponsored Links by Taboola