வீடியோ கேம் மோகம்.. மனஉளைச்சல்... தற்கொலை செய்த பொறியியல் பட்டதாரி!

அதிக கோபத்துடன் டென்ஷனாக இருப்பதால் யாரும் தன்னிடம் பேசவேண்டாம் என அவர் பிறரிடம் கூறியுள்ளார்.

Continues below advertisement

புதுச்சேரி மங்கலம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் தீபக் (வயது 22). சிவில் இன்ஜினியர் பட்டதாரி. இவர் கடந்த ஆண்டு கொரோனா காலத்துக்கு பிறகு மிக அதிகமாக கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போனில் கேம்ஸ் விளையாடி வந்துள்ளார்.  அதன் பிறகு சிறிது உடல் நலக்குறைவு ஏற்பட்டு சீரானது. அவரது வீட்டின் இரண்டாவது மாடியில் அவருக்கென தனியாக அறை இருந்தது. அந்த அறையில் கம்ப்யூட்டர், மொபைல் போன், கேம் விளையாட தேவையான அனைத்து வசதிகளும் செய்திருந்தார்.

Continues below advertisement

ஆடு திருட்டை தடுத்து நிறுத்திய எஸ் ஐ வெட்டிப்படுகொலை..! திருச்சியில் பரபரப்பு!!

இந்த நிலையில் நேற்று வீட்டின் மாடியில் உள்ள தனது அறைக்கு சென்ற தீபக் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சந்திரசேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் தீபக் அறைக்கு சென்று பார்த்த போது, அவர் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக மங்கலம் போலீசில் சந்திரசேகர் புகார் அளித்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


தொடர்ந்து கம்ப்யூட்டர், மொபைல் போனில் விளையாடி வந்த சூழலில் நேற்று இரவு அவரது தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை  செய்துக்கொண்டார். போலீஸார் அவரது சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இவ்விசாரணை தொடர்பாக போலீஸார் கூறுகையில்," முதல்கட்ட விசாரணையில் கடந்த சில நாட்களாகவே தீபக் அதிக பதற்றத்துடன் இருந்துள்ளார். அத்துடன் அதிக கோபத்துடன் டென்ஷனாக இருப்பதால் யாரும் தன்னிடம் பேசவேண்டாம் என்றும் தெரிவித்தார். அவரது அறையில் கணினி, மொபைல் கேம் விளையாடும் வகையில் அனைத்து வசதியும் செய்யப்பட்டிருந்தது. மொபைல்போன், விடியோ கேம் தொடர்ச்சியாக அதிகநேரம் விளையாடியதால் ஏற்பட்ட மனஉளைச்சலில் விரக்தியாகி தற்கொலை செய்திருக்கலாம் என்று விசாரித்து வருகிறோம். பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை மிக அதிகமாக செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் கேம் விளையாட அனுமதிக்க வேண்டாம் என்று தெரிவித்தனர்.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

Continues below advertisement
Sponsored Links by Taboola