புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவருக்கு வயது 50. புதுச்சேரி நகர பகுதியில் சாலையோரத்தில் உள்ளாடைகள் விற்பனை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே இவரது வீட்டில் கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசி சென்றுள்ளார். இதுகுறித்து புதுச்சேரி லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் தலைமையில் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த இரண்டு மாதங்களாக குற்றவாளி யார் என்பதை கண்டறிய போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் இந்த குற்ற சம்பவத்தில் செய்ய மர்ம நபர் யார் என்பது குறித்து கண்டறிய போலீசாருக்கு சிரமமாக இருந்தது. குறிப்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் வீட்டில் ஒருவர் இருசக்கர வாகனத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி செல்லுவது தெரிந்தாலும், அந்த நபர் யார் என்பது சரியாக தெரியவில்லை.


இதையடுத்து இவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வெளி நபர்களிடம் முன்விரோதம் ஏதேனும் இருந்துள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்ய தொடங்கினர். விசாரணையில் புகார்தாரர் பரசுராம் நடத்தி வரும் உள்ளாடை கடையில் அவரது மகன் விக்னேஷ்(வயது 25) தந்தைக்கு உதவியாக வார இறுதி நாட்களில் துணிக்கடை வியாபாரத்திற்கு வந்து செல்வார். மேலும் அதே கடையில் பகுதி நேர ஊழியராக பணியாற்றி வந்த 17 வயது சிறுவனுக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.


அதையடுத்து போலீஸ் செய்த விசாரணையில் நெருப்புக்குழி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் நாட்டு வெடிகுண்டை வீசி சென்றது உறுதியானது. நேற்று முன்தினம் அச்சிறுவனை விசாரணைக்கு அழைத்து வந்த போலீசார் விசாரித்தனர். அப்போது கடை முதலாளியின் மகன் விக்னேஷ் உடன் நட்பாக இருந்தாக கூறியுள்ளார். சிறுவனின் தாயார் கட்டட சித்தாள் வேலை செய்து வருகிறார். அவர் வேலைக்கு செல்வதைப் பார்த்துவிட்டு, சிறுவனின் தாயை அவருடன் பணியாற்றும் கட்டட வேலை செய்யும் ஊழியருடன் தொடர்புப்படுத்தி விக்னேஷ் தவறாக மற்றவர்களிடம் பேசியுள்ளார். அதனையறிந்த சிறுவன் இதைத் தட்டிக் கேட்டுள்ளார். பின்னர் விக்னேஷை மிரட்ட முடிவு செய்து. நாட்டு வெடிகுண்டு தயார் செய்து, அதனைப் பரமசிவம் வீட்டில் வீசி சென்றுள்ளார்.


இதையடுத்து சிறுவனை நேற்று ஞாயிற்றுக்கிழமை நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தியுள்ளனர். சிறுவனிடம் விசாரணை செய்த நீதிபதி சிறுவனைக் கண்டித்து பெற்றோருடன் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். மீண்டும் அந்த சிறுவனை வரும் செவ்வாய்க்கிழமை பெற்றோருடன் வரும்படி கூறியுள்ளதாக ஆய்வாளர் செந்தில் தெரிவித்தார். இந்த சிறுவன் கடந்த இரண்டு மாதங்களாக ஊரிலும் இல்லை.‌ இவர் யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வெடிகுண்டு தயாரிக்கத் தேவையான வெடி பொருட்களை வீட்டில் அருகே கிடைத்த பட்டாசுகள், மற்றும் பட்டாசு தயாரிக்கும் கடைகளில் நாட்டு வெடிகளை வாங்கியுள்ளார். பின்னர் அதன் செய்முறை விளக்கங்களை யூடியூபில் பார்த்து வெடிகுண்டை தயாரித்துள்ளார் என்று லாஸ்பேட்டை ஆய்வாளர் செந்தில் தெரிவித்துள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர