Crime: காரைக்குடி அருகே கல்லூரி மாணவி கொலை - காதலன் வெறிச்செயல்

தலையில் பலத்தகாயம்   ஏற்பட்டதால் சிறிது நேரத்திலே சினேகா சம்பவ இடத்திலே உயிரிழந்தார் சாக்கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Continues below advertisement

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த  மாத்தூர் வேல் முருகன் குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்வராஜ்.  கூலித் தொழிலாளியான இவரது இளைய மகள்  சினேகா வயது 21 நர்சிங் முடித்துவிட்டு அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.  நேற்று மதியம் மாத்தூர் ரேஷன் கடை அருகே ஒரு இளம் பெண் தலையில் அடிபட்டு உயிருக்கு போராடுவதாக ஊர் மக்களுக்கு தகவல் தெரிய வர அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

Continues below advertisement

 காவல்துறையும் ஊர் மக்களும் சேர்ந்து தலையில் பலத்த காயமடைந்த பெண்ணை பார்க்கும் பொழுது அது சினேகா என தெரிய வந்தது. விசாரணையில் சினேகாவுக்கும் அருகே உள்ள  இலுப்பகுடி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி  கண்ணன் என்பவரும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.  சினேகா அக்காவுக்கு திருமணம் ஆகாமல் இருப்பதால் அக்கா திருமணம் முடிந்த பிறகு உங்கள்  திருமணம் நடத்தி வைக்கிறோம் என சினேகா வீட்டு தரப்பில் கூறி உள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சினேகாவை திருமணம் செய்து வைக்க கோரி நேரடியாக வீட்டுக்கே வந்து கண்ணன் தகராறு செய்ததாகவும் இதில் சினேகா தாத்தாவை கண்ணன் தாக்கியதாக  கூறப்படுகிறது.


இதிலிருந்து சினேகாவுக்கும் கண்ணனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு காதலில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கண்ணன் சினேகாவிடம் கொடுத்து வைத்திருந்த பாஸ்போர்ட் மற்றும்  சான்றிதழ்களை தருமாறு போனில் அழைத்துள்ளார். அந்த சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போர்டை  எடுத்துக்கொண்டு சினேகா தன்னுடைய இருசக்கர வாகனத்தில் மாத்தூர்ரேஷன் கடைக்கு வந்துள்ளதாகவும் அப்பொழுது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய  நிலையில் வண்டியில் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் சினேகாவின் தலை தலையில் ஓங்கி அடித்ததாகவும், சினேகாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வரும்பொழுது ஆள் வருவதை கண்ட கண்ணன் வண்டி எடுத்துக்கொண்டு தப்பியதாக கூறப்படுகிறது.  தலையில் பலத்தகாயம்   ஏற்பட்டதால் சிறிது நேரத்திலே சினேகா சம்பவ இடத்திலே உயிரிழந்தார். சாக்கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

Continues below advertisement
Sponsored Links by Taboola