திருப்பத்தூர்: தூக்கில் தொங்கிய நிலையில் 7 மாத கர்ப்பிணி.. கொலையா, தற்கொலையா? என விசாரணை!

ஏழு மாத கர்ப்பிணியின் சடலம் தூக்குமாட்டிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது  .இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பெண்ணின் உறவினர்கள் அவரது கணவரை கடுமையாக தாக்கி அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Continues below advertisement

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஜெயமாதா நகர் பகுதியை சேர்ந்தவர் திலீபன் (28). பெயிண்டர் வேலை செய்து வரும் இவருக்கும் இதே பகுதியை  சேர்ந்த காவியா (21) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று ,  இவர்களுக்கு ஒன்றரை வயதில் சன்சிகா என்ற பெண் குழந்தை உள்ளார் . 

Continues below advertisement

குடிப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள திலீபன் , வேலைக்கு செல்லாமல் தினமும் மனைவி மற்றும் அவர்களது உறவினர்களிடம் குடிக்க பணம்கேட்டு காவியாவை சித்ரவதை செய்து வந்துள்ளார் .


தற்போது ஏழு மாதம் கர்ப்பிணியாக இருக்கும் நிலையிலும் காவியாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார் அவரது கணவர் திலீபன்  . இதனை அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் தலையிட்டு இருவருக்கும் சமாதானம் செய்துவந்துள்ளனர் .

இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு  மது போதையில் இருந்த திலீபன் தனது மனைவி காவியாவுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டு உள்ளார் .

ஐ.ஓ.பி ஏ.டி.எம் கொள்ளையில், வங்கி ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என காவல்துறையினர் விசாரணை..!

ஒருகட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் வலுக்கவே , திலீபன் தனது குழந்தை சன்சிகாவை பக்கத்துக்கு வீட்டில் விட்டுவிட்டு மீண்டும்  மனைவி காவியாவை தாக்கியுள்ளார் .

பின்னர் இரவு 11 .30 மணி அளவில் , வீட்டில் இருந்து வெளியே வந்த திலீபன் , தனது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக பக்கத்து வீட்டுக்காரர்களிடம்  தெரிவித்துள்ளார் .

அதிர்ச்சி அடைந்த அவர்கள் காவியா இறந்த தகவலை உறுதிப்படுத்திக்கொண்டு   , உடனடியாக  காவியாவின் தந்தை  ராஜகுமார்க்கு தெரிவித்துள்ளனர் . மிகுந்த கோபத்துடன் அங்கு வந்த காவியாவின் தந்தை மற்றும் உறவினர்கள் , அங்கிருந்து  தப்பிக்க முயன்ற திலீபனை சரமாரியாக தாக்கினர் . இதில் படுகாயமடைந்த திலீபன் ஜோலார்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .

மேலும் காவியாவின் தந்தை ராஜகுமார் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை போலீசார் காவியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர் .  காவியாவின் குழந்தையை மீட்டு காவியாவின் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். 

தொடர்ந்து இதுகுறித்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட ஜோலார்பேட்டை போலீசார் , திலீபன் குடித்துவிட்டு மனைவி காவியாவை  சித்ரவதை செய்து வந்ததை உறுதி படுத்திக்கொண்டனர் . மேலும் திருமணம் நடந்து  3 வருடங்களே ஆகும் நிலையில் இந்த வழக்கை  வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர் .

கோவை: 'அடிக்கடி செல்போன் பேசாதே' - கிரிக்கெட் பேட்டால் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவர்


காவியாவின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் திலீபன் மீது ஜோலார்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ள நிலையில் , குற்றவாளி திலீபன் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்துவருவதால்  போலீஸ் மற்றும் வருவாய் அலுவலர்கள் அடங்கிய தனிக்குழு இன்று திலீபனிடம் மருத்துவமனையில் விசாரணை நடத்தவுள்ளனர். 

Continues below advertisement
Sponsored Links by Taboola