இந்தியாவில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மந்திரவாதியிடம் அழைத்து செல்லப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 


ஒடிசா மாநிலத்தின் பாலாசோர் பகுதியில் பெண் ஒருவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு திருமணமாகி 2 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்தச் சூழலில் 2017ஆம் ஆண்டு முதல் இவருக்கும் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினருடம் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அவர்களுக்குள் அதிகமாக சண்டை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 


 


இப்படி இருக்கும் போது கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அவருடைய கணவர் வேறு ஒரு ஊரில் கடை ஒன்றை தொடங்கியுள்ளார். அவர் தன்னுடைய வீட்டை வீட்டு வெளியே சென்றுள்ளார். அந்தச் சமயத்தில் கணவன் -மனைவி இடையே இருக்கும் பிரச்சினையை தீர்க்க மாமியர் ஒரு மந்திரவாதியிடம் கூட்டி சென்றுள்ளார். அப்போது அந்த நபர் அப்பெண்ணை அங்கேயே சில நாட்கள் விட்டு செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அப்பெண் மறுத்துள்ளார். எனினும் அவருடைய மறுப்பையும் கேட்காமல் கணவரின் குடும்பத்தினர் அங்கு அவரை விட்டு சென்றுள்ளனர். 


 


அந்த சமயத்தில் அப்பெண்ணை மந்திரவாதி ஒரு பூட்டிய அறைக்குள் வைத்திருந்துள்ளார். மேலும் அந்தப் பெண்ணை தினமும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அப்பெண் நீண்ட நாட்களாக அந்த இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். ஒருநாள் அந்த மந்திரவாதியின் மொபைல் போனை அவருக்கு தெரியாமல் எடுத்து தன்னுடைய பெற்றோர்களுக்கு தகவல் அளித்துள்ளார். இந்த தகவலை வைத்து அவருடைய பெற்றோர்கள் காவல்துறையினருடன் வந்து அப்பெண்ணை மீட்டுள்ளனர். சுமார் 79 நாட்களுக்கு பிறகு அப்பெண்ணை காவல்துறையினர் மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


 


இந்தச் சம்பவம் தொடர்பாக அப்பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பெயரில் எஸ்.கே.தாரஃப் என்ற மந்திரவாதியை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். அவர் வேறு பெண்கள் யாரையும் இப்படி செய்துள்ளாரா என்பது தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை செய்கின்றனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண