ராசிபுரம் அடுத்த வடுகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 20க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு புரஜெக்டர் மூலம் ஆபாச படம் காட்டிய  உதவி தலைமை ஆசிரியரால் மாணவிகள் பள்ளிக்கு செல்ல அச்சப்படுகின்றனர்.


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வடுகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 300க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து மகிழ்ச்சியுடன் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் 11ஆம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கு இயற்பியல் பாடம் நடத்த வந்த உதவி தலைமை ஆசிரியர் எடின்பரோ கோமகன், கணிணி ஆய்வகத்தில் உள்ள புரஜெக்டர் மூலம்  ஆபாச படம் காட்டி பாடம் நடத்தியதாகவும், மேலும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் வகுப்பில் இருந்த மாணவிகள் அதிர்ச்சியடைந்து வகுப்பை விட்டு வெளியேறியுள்ளனர்.   


மேலும் இதுகுறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சில பெற்றோர்கள் ஆன்லைன் மூலமாக மாவட்ட காவல்துறைக்கு புகார் அளித்தனர்.


Meera Mithun: ‛எனக்கு சூசைடு டார்ச்சர் தர்றாங்க...’ நீதிபதியிடம் கதறிய மீரா மிதுன்!


இந்தப்பிரச்சினை குறித்து அந்தப்பள்ளி மாணவிகள் கூறும்போது, இயற்பியல் ஆசிரியர் பாடம் நடத்துவதாக கூறி ஆபாச படம் காட்டி ஆபாசமாக பேசினார். மேலும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி அடிக்கடி சில்மிஷத்தில் ஈடுபடுவதாகவும், இது அனைத்து மாணவிகளுக்கு தெரியும். வெளியில் சொன்னால் ஆசிரியர் அடித்துவிடுவார் இல்லையென்றால் பள்ளியை விட்டு வெளியேற்றி விடுவார்கள் என்ற பயத்தில் யாரும் வெளியில் சொல்ல பயப்படுவதாக மாணவிகள் தெரிவித்தனர்.


மாணவிகள், பெற்றோர்களின் குற்றச்சாட்டுகளை அடுத்து இந்தப்பிரச்சனை குறித்து நாமகிரிபேட்டை காவல்துறையினர் பள்ளியில் சம்பந்தபட்ட உதவி தலைமையாசிரியரிடம்  விசாரணை மேற்கொண்டனர்.


இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஜெகநாதனிடம் கேட்டபோது, நேற்று வந்த மாணவ,மாணவிகளுக்கு இன்று விடுமுறை. அதனால் நாளை பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளிடம் விசாரணை செய்த பிறகே உண்மை நிலை தெரியவரும் என தெரிவித்தார். தொடர்ந்து பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாலியல் ரீதியாக அத்தமீறும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பாக கடுமையான சட்டரீதியான நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையிலும் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்து வருவது வேதனைக்குறியதே. 


காதலைக்கண்டித்த அண்ணன் மீது பாலியல் புகார்.. பழிவாங்க நினைத்த தங்கையால் 2 ஆண்டுகள் சிறை!