கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா பூசாரி பட்டியைச் சேர்ந்தவர் சக்தி வயது 35 இவர் கரூரில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சரண்யா வயது (30) இவர்களது மகள்கள் கனிஷ்கா வயது (6), பூவிஷா வயது (3) இவர்களுடன் சக்தியின் தந்தை கருப்புசாமி, தாய் நாச்சம் வசித்து வருகின்றனர்.


சரண்யா மனநலம் பாதிக்கப்பட்டதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சரண்யா,சக்தி தனது இரண்டு குழந்தைகளுடன் ஒரு அறையிலும் கருப்பஸ்வாமி, நாச்சம் மற்றொரு அறையில் தூங்கினார் இந்த நிலையில் அதிகாலை 2 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த சரண்யா திடீரென கண் விழித்து ஒரு மகனைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தார்.




அவரது வீட்டு அருகே உள்ள 100 அடி ஆழம் உள்ள கிணற்றில் மகளை வீசிவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் மற்றொரு மகளையும் தூக்கிக்கொண்டு கிணற்றில் போட்டு விட்டு தானும் குதித்து தற்கொலை செய்தார். பின்னர் காலை சக்தி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மனைவியை காணவில்லை என அக்கம் பக்கம் தேடி பார்த்த நிலையில் அருகில் இருந்த கிணற்றில் அவர் குதித்துள்ள தகவல் தெரிய வர உடனே அங்கு சென்று பார்த்தனர். அப்போது தாயும் இரண்டு மகள்களும் கிணற்றில் இறந்து கிடந்த உள்ளனர். உடனே பாலவிடுதி போலீசாருக்கு தகவல் அறிந்ததும் பின்னர் புதிய தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


 





தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அருகிலிருந்த இளைஞர்களுடன் தீயணைப்பு படை வீரர்கள் சரண்யா மற்றும் அவரது மகள் பூவிஷா ஆகியோர் உடலை மீட்டனர். அதன் பின்னர் கிணற்றில் மோட்டாரை வைத்து தண்ணீரை வெளியேற்றிய பிறகு 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இன்னொரு மகளான கனிஷ்கா வையும் மீட்டனர். இந்த தகவல் அறிந்து குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்ட் ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார் தோகமலை, பிரபாகரன் பாலவிடுதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து சம்பவம் குறித்து விசாரணையை மேற்கொண்டார்.




பின்னர் அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காந்திகிராம அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.